Thursday, April 17, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஜனவரி 2016 மின்னிதழ் டவுன்லோட்

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2016 மின்னிதழ் டவுன்லோட்

-

puthiya-jananayagam-january-2016

புதிய ஜனநாயகம் ஜனவரி 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. மோடியின் திறன்மிகு இந்தியா : இன்னுமொரு மோசடி!

2. மாற்றா… ஏமாற்றா?

3. “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது” : உச்ச நீதிமன்றத்தின் மனுநீதித் தீர்ப்பு
இந்தத் தீர்ப்பு அர்ச்சக மாணவர்களை ஆகமக் கோயில்களில் நியமிக்கக் கூடாதெனக் கூறவில்லை. “யானையைப் பானைக்குள் அடைக்கலாம். ஆனால், பானை உடையக்கூடாது” என்கிறது. இதனை வெற்றி என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

4. தோழர் சாய்பாபா பிணை ரத்து, அருந்ததி ராய் மீது அவமதிப்பு வழக்கு : நீதிமன்றத்தின் என்கவுண்டர்!

5. சென்னை மாநகரம் : சட்டவிரோத சிங்காரம்
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் சென்னை நகரம் அடைந்துள்ள ‘வளர்ச்சி’யில் சரிபாதி சட்டவிரோதமான முறையில் உருவானதாகும்.

6. மியாட் மருத்துவமனை : ஐந்து நட்சத்திரக் கொலைக்கூடம்
மியாட் மருத்துவமனையில் நடந்த சாவுகள், தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் விதத்தில் தான்தோன்றித்தனமாக நடந்து வருவதை அம்பலப்படுத்திவிட்டது.

7. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் : 59-வது கருக்கரிவாள்!

8. வெள்ளத்தில் மூழ்கிய விவசாயம், சிறுதொழில் : வேடிக்கை பார்க்கிறது அரசு!
ஏறத்தாழ ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மறுவாழ்வுக்கு எந்தப் பதிலும் கூறாமல் மைய-மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றன.

9. சென்னையின் அழிவில் நீதிபதிகளின் பங்கு!
ஆறுகளும் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் என்றும், நீதிமன்றங்கள்தான் இவற்றைப் போற்றிப் பாதுகாப்பதாகவும் உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக்கருத்து பொய்யானது.

10. துப்புரவுப் பணியாளர்கள் : சென்னையின் மீட்பர்கள்!
“சாதி இந்துக்களுக்கு தூய்மையான, மரியாதைக்குரிய வேலைகளையும், தீண்டத்தகாதோருக்கு அசுத்தமான, இழிந்த வேலைகளையும் ஒதுக்கிப் பிரித்துக் கொடுத்து, அதன் மூலம் சாதி இந்துக்களை மரியாதைக்குரியவர்களாகக் காட்டும், தீண்டத்தகாதோர் மீது மானக்கேட்டைத் திணிக்கும் உழைப்புப் பிரிவினையின் மீதுதான் இந்து சமூக ஒழுங்கு நிலைகொண்டுள்ளது” – அம்பேத்கர்.

11. வரலாற்றுக் குற்றத்திலிருந்து அமெரிக்காவை விடுவித்த மோடி!

12. ஏழைகளுக்குத் தீவிரவாதி வேடம்! பொய் மோதல் கொலைக்கு வீரசக்கர விருது!! இராணுவத்தின் முகத்திரை கிழிகிறது!
அகதிகளையும் ஏழைகளையும் ஏலமெடுத்து சுட்டுக் கொன்று, தீவிரவாதி என்று கணக்கு காட்டி விருது வாங்குகின்றனர் இராணுவ அதிகாரிகள் என்று ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறது “என் கைகளில் இரத்தம்” என்ற நூல்.

13. ஊருக்கு ஊரு சாராயம்! கதறுது தமிழகம்!
திருச்சியில் பிப்ரவரி 14, 2016 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள். போதையிலிருந்து தமிழகத்தை மீட்க சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவுகட்ட வாரீர்! – மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

புதிய ஜனநாயகம் ஜனவரி 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க