Wednesday, April 16, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!

பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!

-

வெளிநாடு வாழ் இந்தியப் பிரஜைகளுக்கு வாக்குரிமையும் ,அவர்களின் சொந்தத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்லும் உரிமைக்காகவும் விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார் வயலார் ரவி. தேர்தல் வாக்குச் சீட்டு என்கிற பம்மாத்தெல்லாம் எதற்கு பேசாமல் இந்திய தொழில் கூட்டமைப்பிடம் பாராளுமன்றத்த்தை குத்தகைக்கு விட்டால் அவர்களாக பார்த்து பதவிகளை விற்று விட்டு ஒரு தொகையை ராயல்டியாக அரசுக்கு கட்டி விட்டுப் போவார்கள் என்கிற அளவுக்கு நாடு நாறிக் கிடக்கது. தொழிலதிபர்கள், வாரிசுகள், உயரதிகார்கள் எல்லாம் எம்பியாகி நூற்றி பத்து கோடி இந்தியர்களின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் பாராளுமன்றம் சாதா நேரமும் தொழில் முதலைகளுக்காகவும், தொழில் நிறுவனங்களுக்ககவும் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, நீண்டகாலமாக வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டே தாய்நாட்டின் மீதான பற்றில் துடிக்கும் மேட்டுக்குடி வெளிநாடு வாழ் இந்தியர்களின் தாய்நாட்டுப் பாசத்திற்காக சலுகை காட்டுகிறது இந்திய அரசு. ஆனால் இவர்கள் தேச பக்தி என்பதே தேர்தலில் ஓட்டுப் போடுவதும், கொழுத்த பணத்தோடு வந்து தேர்தலில் போட்டியிட்டு எம்பியாவதும்தான். இந்த பணக்கார வெளிநாட்டு வெள்ளைத் தோல் மனிதர்களும், தன் குடும்ப வறுமையை போக்கிக் கொள்ள கடன் வாங்கி வெளிநாடு சென்று கடின உழைப்பில் கால நேரமில்லாமல் ஈடும் தொழிலாளர்களும் ஒன்றல்ல, எண்ணெய் கிடங்கில், கட்டிடத் தொழிலில், சாலைப்பணியில், வீட்டுத் தொழிலில், மருத்துவப் பணிகளில், மீன் பிடித்தொழிலில் என பல்லாயிரம் ஏழைகள் வெளிநாடுகளில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்திய ஆளும் வர்க்க எஜமானர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு பீபீ லுமாடா.

ஓமன் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்தவர் பீபீ லுமாடா , இவர் இந்தியாவுக்கு திரும்பும் வழியில் தோஹா விமானநிலையத்தின் தன் இந்தியப் பாஸ்போட்டைத் தொலைத்திருக்கிறார். இதனையடுத்து அப்பெண்ணை தோஹா விமான நிலைய அதிகாரிகள் அவரை இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்காமல் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பியிருந்தனர். கடவுச் சீட்டு இல்லாததனாலும், ஒமானுக்குள் மறுபடியும் நுழைவதற்கான விசா இல்லாததாலும் இவரை விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்காமல் மஸ்கட் விமான நிலையத்திலேயே வைத்து விட்டு மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியத் தூதரகப் பணியாளர்களோ அப்பெண்ணை விரைவில் தொடர்பு கொள்வோம் என்று சொன்னதோடு சரி, வந்து பார்க்கவும் இல்லை ஏன் என்று கேட்கவும் இல்லை. ஐந்து நாட்களாக லுமாடா தங்கிவதற்கு அறையோ தனக்கு ஒத்துக் கொள்ளும் உணவோ இன்றி வாடிய நிலையில், அச்சம் அவரை துவட்டி எடுக்க ஆறாவது நாள் காலையில் உறங்கிய நிலையிலேயே லுமாடாவின் உயிர் பிரிந்திருந்தது. அதுவரை நேரில் வந்தோ அள் அனுப்பியோ அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றாத இந்திய தூதர் அனில் வாத்வா  ”பாஸ்போர்ட்டைத் தொலைத்திருந்த லுமாடாவுக்கு தற்காலிக பயண ஆவணங்களை தருவதற்குள்ளாக அவர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக ” தெரிவித்திருக்கிறார். இப்போது லுமாடாவின் உடலை பத்திராமாக அவரது சொந்தங்களிடம் சேர்க்க முயர்சிக்கிறதாம் இந்தியாத் தூதரகம். ஆமாம் இந்த இந்தியா எப்போதும் ஏழைகளின் உடலை பத்திரமாக அனுப்புவதிலேயே குறியாக இருக்கும்.

________________________________

தொம்பன்
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்