Sunday, April 20, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: இலண்டன் ஜி.டி.வியில் சபா.நாவலன் நேர்காணல்!

கூடங்குளம்: இலண்டன் ஜி.டி.வியில் சபா.நாவலன் நேர்காணல்!

-

இலண்டனில் இயங்கும் ஜி.டி.வி எனும் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 24.03.2012 சனிக்கிழமையன்று கூடங்குளம் தொடர்பான விவாதமொன்று ஒளிபரப்பானது. வெளிச்சம் எனும் விவாத நிகழ்ச்சிக்காக நடைபெற்ற இந்நிகழ்வில் இனியொறு தோழர் சாபா.நாவலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் பங்கேற்றனர். நாவலன் நேரிலும், மருதையன் தொலைபேசி மூலமும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதன் முழு வீடியோ யூ.டியூபில் வெளியிடப்பட்டிருக்கிறது. சுமார் ஒன்றேகால் மணி நேரம் இடம் பெறும் விவாதத்தில் இரு முறை விளம்பர இடைவேளை வருகின்றது. ஆரம்பத்தில் தோழர் மருதையனின் புகைப்படம் என்று தோழர் மதிமாறனது படத்தை தவறாக காட்டியிருக்கிறார்கள். பின்னர் நீக்கியிருக்கிறார்கள்.

விவாதத்தில் கூடங்குளம் போராட்டம் தொடர்பாகவும், அதன் அரசியல் பரிணாமங்களும் விளக்கப்பட்டிருக்கின்றது. அதன் பொருட்டு அந்த உரையாடலை இங்கு வெளியிடுகிறோம்.

 

படிக்க