Sunday, April 20, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபெட்ரோல் விலை உயர்வு : IOC அலுவலகம் முற்றுகை!

பெட்ரோல் விலை உயர்வு : IOC அலுவலகம் முற்றுகை!

-

பெட்ரோல்-விலை-ஏற்றம்
பெட்ரோல் தட்டுப்பாட்டினால் அவதி - சென்னை அண்ணா சாலை பெட்ரோல் பங்கில் கைகலப்பு - படம் thehindu.com

பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த கையோடு பெட்ரோல் விலையை ஏழு ரூபாய்க்கும் மேல் உயர்த்தி மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்த விலை உயர்வை யார்தான் கண்டிக்கவில்லை?

காங்கிரசு மந்திரி ப.சிதம்பரம் கூட கசப்பான முடிவு என்று ‘வருத்தப்’படுகிறார். இவர்களையெல்லாம் ஆட்சிக்கு அனுப்பியது கசப்பான முடிவு என்று மக்கள் உணர்ந்தால் இந்த கசப்பு வேடமெல்லாம் முடியுமா? காங்கிரசுக் கூட்டணி அரசில் அங்கம் வகித்துக் கொண்டே திரிணாமூல் காங்கிரசும், தி.மு.கவும் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றன. ஏன் விலை உயர்வைக் கண்டித்து அதைத் திரும்பப் பெறும் வரை ஆட்சிக்கு தரும் ஆதரவு வாபஸ், அமைச்சர்கள் ராஜினாமா என்று சொல்லவில்லை? கூட்டணி பிழைப்புவாதத் தருமத்தையும் மீறக்கூடாது, மக்கள் முன் நடிக்கவும் வேண்டும்.

இது போக ஆளும் கட்சி அ.தி.மு.க முதல், எதிர்க்கட்சி தே.மு.தி.க வரை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். மறுகாலனியாக்கத்தை முற்றிலும் ஆதரித்துக் கொண்டே அதன் விளைவுகளின் பால் வரும் மக்கள் கோபத்தை வலுவிழக்க செய்வதற்கே ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளின் நாடக எதிர்ப்பு பயன்படுகின்றன.

மக்கள் வாங்கும் பெட்ரோலில் வரி இரு பங்கு, விலை ஒரு பங்கு என்று ஒரு கொள்ளை. இதை எந்த மாநில அரசுகளும் தட்டிக் கேட்பதில்லை. வரியையும் ரத்து செய்வதில்லை. அடுத்து எண்ணெய் நிறுவனங்களின் இலாபக் குறைப்பையே நட்டமென்று காட்டும் கணக்கு மோசடிகள். சென்னையிலோ பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு. இப்படி பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் மோசடியை மக்கள் என்று உணர்வார்கள்?

உணர்த்த வேண்டும் என்பதன் துவக்கமாக ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புகளும் இன்று 29.5.2012 செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகத்தை முற்றுகையிடுகின்றன. அனைவரும் வருக!

தொடர்புக்கு – 94448 34519

 

பெட்ரோல்-விலை-ஏற்றம்

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்