செப்டம்பர் 17, பெரியார் பிறந்த நாள், பிறக்கட்டும் நமக்கும் சுயமரியாதை !
- கந்த சஷ்டி கவசமின்றி
தமிழனால்,
காலைக் கடனும்
கழிக்க முடியாத அவலம்,
உட்கார்ந்து எழுந்தால் கூட
சிவ,சிவா … ராமா சுலோகம்
- ஒரு பக்கம்… பார்ப்பன மதர்ப்பு
மறுபக்கம்… சைவக் கொழுப்பு
அறிவின் வழியெங்கும்
ஆரிய அடைப்பு. - வெள்ளாமை எங்கும்
வெள்ளாள, முதலி, பார்ப்பன சவுக்கு
எதிர்த்துக் கேட்டால்
மனுதர்மத்தால் ஆளைத் தூக்கு!
- மூடத் தனத்தால் மூளை கருகி
சாதித்தமிழன் நெற்றியெங்கும்
சாம்பல் மேடுகள் …பிராமண வாயுவை
சுவாசித்து, சுவாசித்து
‘ஒரிஜினல்’ தமிழன் குருதிக்குள்ளும்
பூணூல் கோடுகள்…
இதுதான் நிலைமை…
இனி யாரால் மாறும்? என
இறுமாந்த பார்ப்பனியத் தலையில்
இடியாய் விழுந்தார் பெரியார் !”எவன்டா இந்து?
எல்லோரும் ஒன்று எனில்
எங்களையும் கருவறையில் விடு!” – என
பெரியார் போட்ட போடில்
துடியாய் துடித்தது தர்ப்பை,
சாதியம் தான் பார்ப்பனியம் – என
சரியாய் பிளந்தார் பெரியார் !
- அறிவாளிகள் எல்லாம்
ஆராய்ச்சியில் இருந்த போது,
“நீ வேலை செய்தால்
அவன் தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பான்
அதான்டா பார்ப்பான்”!
சுரண்டல்தான் பார்ப்பனியம்
என சுறீரென்று கொடுத்தார் !”சட்டையைக் கழற்றி விட்டு பாத்தா
எந்த சாதிக்கும் வித்தியாசமில்ல” – என
பொட்டில் அடித்தது போல்
பெரிய விசயங்களை
எளிதாக எடுத்துப் போடுவதில்
பெரியாருக்கிணை பெரியார்!
- பார்ப்பனப் பெண்ணாயினும்
வேலைக்குப் போய், சுயசார்பு வேண்டுமென
அறிவுறுத்தியவர் பெரியார்,
வேலைக்குப் போகும் பெண்கள் சுத்தமில்லை – என
காவாயைத் திறந்தவன் ‘பெரியவா’
உரியவா! சொல்லுங்கள்
யார்? பெரி…யார்?
- பலரும்
பயந்து பயந்து
தொட்டு வைத்த எதையும்,
பெரியார் விட்டு வைக்கவில்லை,
பார்ப்பன குதர்க்கம்
பார்த்த இடமெங்கும் குட்டு வைத்தார்,
பாருங்கள்,
சோவின் தலையில்
இன்னும் பெரியார் வீக்கம்,
ஜெயமோகன் கிளையில்
பெரியார் புழுக்கம்…
பகுத்தறிவுக் கொவ்வா
தமிழ் பிழைப்புவாதம் பார்த்து
காட்டுமிராண்டியே பதில் சொல் – என
கேட்டு வைத்தார் !
இதோ ஈழத்தாயின்
பார்ப்பன பிராதுகளோடு இன்று
ஆஜராகிறார் சீமான். - உயிரோடிருக்கும் கருணாநிதியிடமும், கனிமொழியிடமும்
உரையாடி ஒரு முடிவுக்கு வாராமல்,
போயசு மாமியிடமும் ஒரு எட்டு வைத்து
கட்டுப்பட்ட சிறுத்தை ரவிக்குமார்
கட்டுடைக்கிறாராம் பெரியாரை.கேட்பவர்களின் யோக்கியதை
பெரியாரின் போதாமையை விட
பின் தங்கியிருப்பதால்
உண்மையில்,
தமிழியம், தலித்தியம், இந்தியம் என
பல வண்ண பார்ப்பனியர்களை
பெரியார் இன்னும் புட்டு வைக்கிறார்.புராணம், இதிகாசமென
தடித்துப் போன தோளில்
சுயமரியாதை உணர்ச்சியெழுப்ப
தமிழனை தட்டி வைத்தார் பெரியார்.பார்ப்பன பாசியில்
வழுக்கிய விதைகளை
அவர்தான் மான உணர்ச்சியில்
நட்டு வைத்தார்!அடிமை நாக்கு
பார்ப்பனர் சுவை
படர்ந்த நாட்களில்,
பகுத்தறிவு சுவையை
பழக்கியவர் பெரியார்
பகுத்தறிவுக்கு சுவையுண்டா?
நான்றியேன்,
ஆனால் பெரியார்
பார்ப்பானுக்கு கசக்கிறார்
பாட்டாளி சூத்திரனுக்கு இனிக்கிறார்.பார்ப்பன கடுப்பு கூட
பெரியார் கடவுளை மறுத்ததல்ல,
பார்ப்பன ஆதிக்கத்தை மறுத்தது தான்,
“கருவறைக்குள் சூத்திரன் நுழைந்தால்
பார்ப்பானே கடவுள் இல்லை என்று
பிரச்சாரம் செய்வான்” – என்று
சரியாகத்தான் சொன்னார் பெரியார்.
- தமிழினச் சுருக்கம்,
தகர்த்த முதுமை,
எவரெதிர்த்தாலும் எதிர்த்திசை நடந்த
முதிர்ச்சியின் இளமை,
எதிரிகள் பேணா(த)
ஒழுக்கத்தின் தகைமை.
இனிப்பிறக்கும் பார்ப்பன கிருமிக்கும்
தீரா பகைமை!பகுத்தறியாமல்
தான் சொன்னதை அப்படியே ஏற்க வேண்டாம் – என
விமர்சனத்துக்கு வழி விட்ட பெருமை !
இதுவன்றோ பெரியார்!
- சுயமரியாதைக்கென்றே
ஒரு இயக்கம் தொடங்குமளவுக்கு,
சுரணையற்ற தமிழக நிலைமை
கணினி உலகால் மாறி விட்டதா?
பிறவி இழிவைத் துடைக்க
பெரியார் சிந்தனை தேவை இன்றும்!
சூத்திரனென்றால்
ஆத்திரம் கொண்டு அடிக்க
சலவைத் தொழிலாளியால் முடிந்தது,
முன்னேறியதாய் பீற்றிக் கொள்ளும்
கணினித் தொழிலாளிக்கோ,
சுயமரியாதை என்ன
அவமரியாதையும்
மவுசுக்குள் அடக்கம்
நிமிர்ந்து பார்த்தால்
கனவுகள் முடக்கம்.பாப்பார கம்பெனி
ஆதிக்கத்திற்கெதிராக மட்டுமல்ல
பன்னாட்டு கம்பெனி ஆதிக்கத்திற்கெதிராகவும்
போராடுவதுதான் சுயமரியாதை,
அதிகாரம் மனுதர்மமாக மட்டுமல்ல
சாஃப்ட்வேராகவும் எழுதப்படும்கட்டுன ‘இன்ஸ்டால்மென்ட்டின்’
கவுரவத்தை ‘கணபதி ஹோமத்தால்’ காப்பாற்ற முடியாது.
பெரியாரின்
“மனித வாழ்வின் பெருமை எது? ” நூலைப் படி
ஐ.டி. அவலத்தை பகுத்தறிவால் முடி !பார்ப்பனக் கொலைகாரன் ராமனை
செருப்பாலடித்து,
பார்ப்பனக் கட்டுக்கதை விநாயகனை
தேங்காய்க்கு உடைத்து
தமிழகத்தை இந்துத்துவத்தின்
கல்லறையாக்கினார் தந்தை பெரியார்பார்ப்பனப் பகைமை முடிந்தபாடில்லை,
போராட்ட மரபினைத் தொலைத்த
தமிழக வீதியில்
பிள்ளையார்கள் ஊர்வலம்.
உரிமை மறுக்கப்பட்ட
தமிழன் வாயில் ‘பாரத் மாதாகீ ஜெய்!’பிள்ளையார் கையில்
பிச்சுவா கத்தி
பெரியார் மண்ணில்
நரேந்திர மோடி,
கார்ப்பரேட் தர்மத்தை காப்பாற்ற
தேசவளத்தை அந்நியன் சூறையாட
மறுகாலனியாக்க ராமனாய்
மறுபடியும் அடியாளாய் அடிவைக்கும்
பார்ப்பன கொலைகாரன் மோடி,
தமிழகத்தில் கால் வைப்பதை எதிர்ப்பதே
பெரியார் பிறந்தநாளின்
சுயமரியாதைக் கொண்டாட்டம் !
– துரை சண்முகம்