Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்சென்னை போரூர் கட்டிட விபத்து - புகைப்படங்கள்

சென்னை போரூர் கட்டிட விபத்து – புகைப்படங்கள்

-

சென்னை கட்டிட விபத்து : உங்கள் பீர் பார்ட்டிக்கு தடையில்லை !

டந்த சனிக்கிழமை (ஜூன் 27, 2014) சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில்    இதுவரை 17 தொழிலாளிகள் பலியாகியிருக்கின்றனர்.  100-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.  தப்பிப் பிழைத்தவர்களும் தமது சொற்ப உடமைகளை கட்டிட இடிபாடுகளில் பறிகொடுத்து விட்டு ஏதிலிகளாக விடப்பட்டுள்ளனர். புதையுண்டவர்களின் உறவினர்களோ என்ன ஏது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  வினவு செய்தியாளர் குழு நேரில் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில :

இடிந்து விழுந்த கட்டிட வளாகத்தின் நுழைவாயில்
இடிந்து விழுந்த கட்டிட வளாகத்தின் நுழைவாயில்
கட்டிட இடிபாடுகள்
கட்டிட இடிபாடுகள் பக்கத்து வீட்டில் விழுந்து அந்த வீட்டில் வசித்த ஒருவர் உயிரிழந்தார்.
தமிழ் செல்வன்
மதுரை திடீர் நகரைச் சேர்ந்த தமிழ் செல்வன் – கட்டிட இடிபாடுகளில் சிக்கி தப்பித்து வெளி வந்தவர்
பாதிக்கப்பட்ட தொழிலாளிகள்
பாதிக்கப்பட்ட தொழிலாளிகள்
கணவரை இழந்த பெண்
கட்டிட வேலைக்குச் சென்ற கணவரை தேடும் போரூரைச் சேர்ந்த சாந்தி
அடையாள தேடல்
உள்ளே சிக்கிக் கொண்டவர்களின் புகைப்படங்களை அதிகாரிகளிடம் காட்டி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று தேடும் உறவினர்கள்.
building-collapse-victim-13
கட்டிட இடிபாடுகளில் சிக்கிய விருதுநகர் பர்மாகாலனியைச் சேர்ந்த முகமது ஹாசனைத் தேடி அலையும் அவரது தந்தை
தொழிலாளர்கள்
விடை தெரியாத கேள்விகளுடன் தொழிலாளர்கள்
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி – இடிந்தது தனியார் நுகர்வு வெறிக்கான கட்டிடமானாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் கொடுப்பது அரசுப் பள்ளிதான்.
தங்குமிடம்
கிராமத்தில் வாழ்க்கை பறிக்கப்பட்டு, வசிப்பிடமாக இருந்த கட்டப்பட்டு வந்த கட்டிடமும் இடிந்து நொறுங்கிய பிறகு கிடைத்திருக்கும் புகலிடத்தின் லட்சணம்.
தொண்டு நிறுவன வல்லூறுகள்
தொண்டு நிறுவனத்தின் சின்னத்தோடு, புகைப்படக்காரர்களை கூடவே அழைத்து வந்து சாவு வீட்டிலும் விளம்பரம் தேடும் சென்னையைச் சேர்ந்த “உங்களுக்காக” தொண்டு நிறுவனம்.
பத்திரிகையாளர்
பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள்
ஃபிளாஷ் ஃபோட்டோ
நள்ளிரவில் கதறி அழும் தொழிலாளர்கள்.
நெல்லூர் சப்கலெக்டர்
தெலுங்கு தொழிலாளர்களுக்கு நிவாரணம் – நெல்லூரிலிருந்து வந்த சப்-கலெக்டர் பெண்மணி
கட்டிட விபத்து பிக்னிக்
இடிந்த கட்டிடத்தை வேடிக்கை பார்க்க குழந்தைகளோடு வந்திருப்பவர்கள்.
வி.ஐ.பிக்கள் கார் ஊர்வலம்
வி.ஐ.பிக்கள் கார் ஊர்வலம்