Tuesday, April 22, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கதஞ்சையில் சமஸ்கிருத வாரம் அரசு சுற்றறிக்கை நகல் எரிப்பு

தஞ்சையில் சமஸ்கிருத வாரம் அரசு சுற்றறிக்கை நகல் எரிப்பு

-

மோடி அரசின் சமஸ்கிருத வார கொண்டாட்டம் – மனுதர்மத்தை நிலைநாட்டும் சதித் திட்டம்

என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகம் கடந்த ஜூலை 25 அன்று காலை 10.30 மணிக்கு தஞ்சை பழைய பேருந்து நிலையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சூத்திரன் படிப்பதை தடுப்பது மனுநீதி!

சமஸ்கிருதம் படிக்கச் சொல்லி அடிப்பது மோடிநீதி!

சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு, வரலாற்றுத் திரிபு எனத் தொடரும் மோடிஅரசின் இந்து மதநெறி பண்பாட்டுத் தாக்குதலை முறியடிப்போம்!

என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சமஸ்கிருத வாரம் கொண்டாடக் கோரும் அரசு சுற்றறிக்கை எரிக்கப்பட்டது.

மகஇக  மாநில இணைச்செயலாளர் தோழர் காளியப்பன் தனது உரையில்,  “பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் இல்லை. இரண்டு பேரும் தனியார் மய, தாராள மய, உலகமய கொள்கையை அமல்படுத்துகின்றனர். பா.ஜ.க அரசு வெளிப்படையாக இந்து மதவெறியை தூண்டி விட்டு பார்ப்பன பாசிசத்தை வளர்ப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சாவூர்
தொடர்புக்கு : 9443157641, 9443188285