மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு !
பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !
மோடி அரசின் சமஸ்கிருத வாரம் !
இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்!
‘உலக மொழிக்கெல்லாம்
தாய்மொழி சமஸ்கிருதம்’ என்று
பொய் நெல்லைக் குத்திப்
பொங்குகிறார் மோடி.

பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !
மறுகாலனியாக்கக் கொள்கையை
பார்ப்பனப் பாசிச வழியில்
உறுதிப்படுத்தும் பிரதமர் மோடி,
‘கடவுள் மொழி சமஸ்கிருத’த்தின்
ஆர்.எஸ்.எஸ் புத்திரனே
என்று புரிந்து கொள்வோம்!
நூறாண்டு முன்பே
பார்ப்பனப் பொய்களைச் சுட்டெரித்து
சமஸ்கிருதத்திலிருந்து
முற்றாக வேறுபட்ட
தனி மூல மொழி திராவிடத் தமிழ் என்று
முழங்கினார் கால்டுவெல்.
சமஸ்கிருதம் – இந்தி என்று
எங்கு எப்போது திணிக்கப்பட்டாலும்,
அதை எதிர்த்து முறியடிப்போம்!
கல்வியில் தமிழ் பயிற்றுமொழி
அரசு அலுவலகங்களில் தமிழே நிர்வாக மொழி
நீதி மன்றங்களில் தமிழே வழக்காடும் மொழி
என அனைத்து துறைகளிலும்
தமிழை ஆணையில் வைப்போம்.
மோடி அரசின் பார்ப்பனீய பண்பாட்டுத் திணிப்பு, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு
இந்து – இந்தி-இந்தியா என்ற இந்து ராட்டிரத் திணிப்பே !
பார்ப்பன இந்துமதவெறிப் பாசிசத்துக்கு எதிரான இன்றைய போரில்
தமிழ் மரபைக் களத்தில் நிறுத்தும் போர்வாளான கால்டுவெல்லை உயர்த்திப் பிடிப்போம்!
பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பனீயத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்!
மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என திரளாக கருத்தரங்கில் கலந்து கொள்வோம்!
கருத்தரங்கம்
நாள் :
செப்டம்பர் 16, 2014
நேரம் :
காலை 10.30 மணி
இடம் :
கல்யாணி ஸ்ரீநிவாசா பத்மாவதி மகால்,
ஆவடி ரோடு,
கரையான் சாவடி, சென்னை.
சிறப்புரை :
தோழர் துரை.சண்முகம்
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ் நாடு.
தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை
9445112675