Monday, April 21, 2025
முகப்புஉலகம்இதர நாடுகள்ஆஸ்திரேலியாவில் மோடியை எதிர்த்து போராட்டம்

ஆஸ்திரேலியாவில் மோடியை எதிர்த்து போராட்டம்

-

இந்திய பூர்வகுடிகளின் எதிரியான பார்ப்பனியத்தின் தளபதி மோடிக்கு ஆஸ்திரேலிய பூர்வகுடி நடன வரவேற்பு!
இந்திய பூர்வகுடிகளின் எதிரியான பார்ப்பனியத்தின் தளபதி மோடிக்கு ஆஸ்திரேலிய பூர்வகுடி நடன வரவேற்பு! படம்  நன்றி – The Hinduஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மோடி ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். ஏற்கனவே அமெரிக்காவில் அவர் செய்த மாபெரும் ‘சாதனை’கள் குறித்து இன்றும் ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்து வருகின்றன. இந்த ஃபுல்காங்கிதம் தற்போது கங்காரு தேசத்திலும் நடக்கிறது.

சிட்னியில் புலம்பெயர் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு கூட்டத்துக்கு நேற்று (17/11/2014) மோடி சென்றார். இந்தியர்கள் 16,000 பேர் மோடியை வரவேற்க அலைகடலென திரண்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. கூட்டத்தின் பிரம்மாண்டத்தை சித்தரிக்கும் ஊடகங்கள், மோடி செல்லுமிடமெல்லாம் அவரை விடாமல் துரத்தும் 2002-ம் வருட குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலைகளின் நீதிக்கான வேட்கையை மூடி மறைக்கின்றன. கவித்துவ நீதியின் மீது நாட்டம் கொண்ட அறவுணர்வு குன்றாத இந்தியர்கள் ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகர்கிறது இந்த செய்தி.

நூற்றுக்கணக்கான மக்கள் — பெரும்பாலும் சீக்கியர்கள் திரண்டு மோடிக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், ‘மோடி உங்கள் கரங்களில் ரத்தம் தோய்ந்திருக்கிறது’, ‘பொய் ஒருபோதும் உண்மையாகாது’, ‘தவறு எப்போதும் சரியாகாது’, ‘தீமை நல்லதாக மாறாது’ என்று எழுதப்பட்டிருந்தன. சிட்னியில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் பிரதமர் டோனி அபட் மெல்போர்னில் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சிக்கும் சென்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர், போராட்டக்காரர்கள்.
இந்த எதிர்ப்பு குறிப்பாக 2002-குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலைக்காக என்பது குறிப்பிடத்தக்கது. சிட்னியில் என்ன நடக்கிறது என்று கார்ப்பரேட் ஊடகங்களின் மூலம் மோடி மகிமை அள்ளித் தெளிக்கப்படும் போது ஆஸ்திரேலிய வாழ் சீக்கிய மக்களின் எதிர்ப்பெல்லாம் எங்கேயும் வராது.

"மோடி உங்கள் கையில் இரத்தக் கறை" ஆஸ்திரேலிய சீக்கிய மக்கள் எதிர்ப்பு!
“மோடி உங்கள் கையில் இரத்தக் கறை” ஆஸ்திரேலிய சீக்கிய மக்கள் எதிர்ப்பு!

இதோடு கூடவே “காஷ்மீர் கவுன்சில் ஆஃப் ஆஸ்திரேலியா” எனும் குழுவினரும் மோடியை எதிர்த்து போராட்டத்தை பதிவு செய்திருக்கின்றனர். இந்த போராட்டம் நியூ சவுத் பாராளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்றது. காஷ்மீருக்கு அமைதியான தீர்வு ஏற்பட்டால்தான் இந்தியா, பாக் இருநாடுகளும் முன்னேற்றத்தை அடையுமென கவுன்சிலின் நிறுவனர் மும்தாஸ் மியன் ஊடகங்களிடம் கூறினார்.

modi-sydney-2மோடி எனும் பாசிஸ்டை எவ்வளவுதான் மூடி மறைத்து மேக்கப் போட்டு மினுக்க வைத்தாலும் உண்மை மறைந்து விடாது. மோடி எங்கு சென்றாலும் அங்கே எதிர்ப்பதற்கு நம் மக்கள் இருக்கிறார்கள். காட்டுவதற்குத்தான் ஊடகங்கள் இல்லை.

modi-sydney-1

மேலும் படிக்க: