Monday, April 21, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கூவத்தை ஆக்கிரமித்துள்ள ACS கல்லூரியை அகற்றுவோம் !

கூவத்தை ஆக்கிரமித்துள்ள ACS கல்லூரியை அகற்றுவோம் !

-

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

acs-poster-2பேரழிவு வெள்ளத்திற்கு மூலக்காரணம் நீர்நிலைகள் மீது கார்ப்பரேட் கம்பெனிகளும் மருத்துவக் கல்விக் கொள்ளையர்களும் செய்துள்ள ஆக்கிரமிப்புகள்தான்! செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு படுநாசத்தை ஏற்படுத்திய பார்ப்பன பாசிச ஜெயலலிதா கும்பல், மற்றவர்கள் கொண்டுவந்த நிவாரணப்பொருட்களை வழிப்பறி செய்து தன்படத்தை ஸ்டிக்கர் ஒட்டிக்கொடுத்த பார்ப்பன பாசிச ஜெயலலிதா கும்பல், இன்று ஏழைகளின் ஒண்டுக்குடித்தன குடிசைகளை குறிவைத்து அகற்றி வருகிறது. இந்தக் கொடுமைகள் போதாதென்று அந்த இடங்களில் புதிதாக ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சைதாப்பேட்டை சின்னமலை பேருந்துநிலையம் அடுத்து உள்ள நீர்பிடிப்பு இடத்தை அமைச்சர் நத்தம் விசுவநாதனின் பினாமி கம்பெனி என்று சொல்லப்படும் காசா கிராண்டா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது, இதற்கொரு எடுத்துக்காட்டு!

acs-banner”…. இப்போது நீர் செல்லும் இடங்களில் எல்லாம் கல்விச்சாலைகள் நிற்கின்றன. ஏரி நிறைந்த மாவட்டமாக இருந்த செங்கல்பட்டு இப்போது பொறியியல் கல்லூரிகள் நிறைந்த இடமாக மாறியுள்ளது. இருக்க வேண்டிய இடத்தில் அந்த கல்லூரிகள் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், நீர் வரும் பாதையில், ஆறுகள், ஏரிகள் இருந்த பகுதிகளில்தான் பெரும்பாலான கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன…..” ”……சுயநலம் மிக்க ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் பேராசையின் காரணமாகவே இப்படிப்பட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது……” “…..இதற்கெல்லாம் நாம் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. எங்கே தவறுகள் நடக்கிறதோ அங்கே மக்கள் சக்தி மூலம் தட்டிக்கேட்டு தவறுகளை திருத்த வேண்டும்……”. இவ்வாறு சொல்லியிருக்கிறார் – உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன். (ஆதாரம்; தி இந்து – தமிழ் 4.1.2016)

”……காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1200 க்குமேல் ஏரிகள் இருந்துள்ளன,. அதேபோல் கடந்த 20, 30 ஆண்டுகளில் ஏரிகளை திட்டமிட்டு அழித்துவிட்டோம். ரியல் எஸ்டேட் மூலம் நிறைய வீடுகள் கட்டப்பட்டுள்ளன…..” ‘’…. ஒரு ஏரியில் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்யும் போதோ அல்லது வீடு கட்டும்போதோ தட்டிக் கேட்க வேண்டும். நமக்கு சொந்தமான ஏரி வாய்க்கால் நீர்நிலைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்…….” என சொல்லியிருக்கிறார் மழை வெள்ள மீட்புப் பனிக்கான அதிகாரி அமுதா, ஐ.ஏ.எஸ். (ஆதாரம்; தி இந்து- தமிழ். 4.1.2016)

நேற்றுவரை, கார்ப்பரேட் கொள்ளையர்களின் ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்தி பாதுகாத்து வந்த நீதிமான்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இன்று இவ்வாறு பேச நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். காரணம் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக லட்சக்கணக்கான மக்களின் மனங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் எரிமலைகள்தான். இனி எரிமலைகள் வெடிக்கட்டும்.

*குட்டிச்சுவராகிவிட்டது இந்த அரசமைப்பு!
ஆள்வதற்குவக்கற்றுப்போய்
மக்களுக்கெதிராக அராஜகஆட்டம்போடுகிறது
அதிகாரவர்க்கம், போலீசு, அமைச்சரவை!
ஆதரித்து வக்காலத்து வாங்குகின்றன நீதிமன்றங்கள்!

ஆள அருகதையிழந்த அரசுக்கட்டமைப்பு இனி எதற்கு?
அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!
அரசியல்வாதிகள் அதிகாரிகள்
கார்ப்பரேட்கொள்ளையர்களின்
ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம்!

ஆக்கிரமிப்பாளர்களின்சொத்துக்களை
பறிமுதல் செய்வோம்! தண்டிப்போம்!

தேர்தல் மாயாஜாலத்திற்கு மயங்கி
காத்திருக்க வேண்டாம்! களமிறங்குவோம்!

கூவம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள
ACS கல்லூரியை அகற்றுவோம்!

10.1.2016 காலை 11.00 கல்லூரி வாயில் – மதுரவாயல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற
தங்கள் உயிரை துச்சமெனக் கருதி களத்தில் இறங்கிய
மாணவர்களே, இளைஞர்களே, .டி ஊழியர்களே, தொழிலாளர்களே,

பாதிக்கப்பட்ட மக்கள் கேட்பது நிவாரணமல்ல – நீதி !
உண்மையாக ஆக்கிரப்புகளை அகற்றும் போராட்டத்தில் பங்கெடுக்க வாருங்கள்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை.
9445112675

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க