லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் மே 2016 தொழிலாளர் தினத்தையொட்டி வெளி நாட்டு தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறையை கண்டித்து ஊர்வலம் நடத்தினர். சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட C189 அமுல்படுத்து என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி, அதாவது வாரத்தில் ஒரு நாள் விடுமுறை மற்றும் குறைந்தப்பட்ச ஊதியம் என்பது எங்களின் உரிமை என்ற முழக்கங்களொடு பேரணி நடத்தினர்.
லெபனானில் இரண்டு இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களில் பலர் வீட்டு வேலை செய்யும் தொழிலாளிகளாக பணிப்புரிகின்றனர் இவர்கள் பெரும்பாலும் பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா, பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாள் போன்ற நாடுகளை சார்ந்தவர்கள். தங்களுடைய முதலாளிகளின் வெளிப்படையான கடிதமின்றி இவர்கள் எந்த காரணத்திற்காகவும் நாட்டை விட்டு வேளியேற முடியாது, இந்நிலை அவர்களை மேலும் மேலும் அதிக சுரண்டலுக்கு ஆளாக்குகிறது.
லெபனானில் இவர்கள் மீது அப்பட்டமான அத்துமீறல் நடைபெறுகிறது. குறிப்பாக வேலை நேரத்தை அதிகரிப்பது, சம்பளத்தை நிறுத்தி வைப்பது, அடிப்பது, துன்புறுத்துவது, பாலியல் ரீதியில் சித்ரவதை, எங்கும் செல்ல முடியாமல் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொள்வது என தொடர்கிறது. லெபனான் தொழிலாளர் சட்டம் இவர்களுக்கு பாதுக்காப்பு வழங்க மறுக்கிறது. கடந்த வருடம் தங்களின் நிலைமைக்காக போராட, இந்த தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களுக்காக ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி போராடி வருகின்றனர்.
இந்த வருட மே தினத்தில் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பேரணி நடத்தினர்.






வேண்டும் என பேரணியில் முழக்கமிட்டனர்

டாலர்கள் தான் கொடுக்கிறாங்க அதனாலதான் நான் இங்க(பேரணியில்) இருக்கிறேன்”

பிடித்திருக்கிறது. எங்களுக்கு நல்ல ஊதியமும் விடுப்பும் வேண்டும். லெபனானலில் இனவாதம் அதிகமாக உள்ளது ”



முதலாளிக்கிட்டதான் இருக்கு. இந்த 20 வருசத்துல என்னுடைய தாய், மகள் இறந்தவிட்டனர். அவர்களின் இறப்புக்குக்கூட என்னால போக முடியல. எனக்கு நீதி வேண்டும்”


தொகுப்பு: கலா
நன்றி: அல் ஜசீரா