Tuesday, April 22, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககோவை, விருதை, திண்டிவனம் களச் செய்திகள் - 15/07/2016

கோவை, விருதை, திண்டிவனம் களச் செய்திகள் – 15/07/2016

-

1. இருண்ட காலம் எதிரில் காத்திருக்கிறது, முறியடிக்க அணி திரள்வோம்

கோவை மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகவும் நீதிமன்ற பாசிசத்துக்கு எதிராகவும் செஞ்சிலுவை சங்கம் அருகே உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்து மாநகர காவல்துறை எழுத்துபூர்வ கடிதம் கொடுத்தது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ndlf-kovai-demo-in-solidarity-with-lawyers-2இதனையொட்டி கோவை நீதிமன்ற வளாகம் முழுவதும் இரண்டு நாட்களாக தோழர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக சுவரொட்டியும் ஒட்டப்பட்டது. கோவை மாவட்டத்தில் எந்த ஓட்டுக் கட்சியும் செய்யாத நிலையில் புரட்சிகர அமைப்புகள் வீச்சாக பிரச்சாரம் செய்தன.

மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரிடமும் செயலாளரிடமும் நேரில் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. தொழிலாளி வர்க்கம் தனக்கான் போனஸ், சம்பளம் போன்ற கோரிக்கைகளுக்காக மட்டும் போராடுவர் என்பதை மாற்றி சமூகத்துக்காகவும் போராடுவர் என்பதை நிலை நாட்டும் வகையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர் எம்.கோபிநாத் தலைமை தாங்கினர். பின்னர் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்டது.

காவல்துறை அனுமதி மறுத்த காரணத்தால் இதர தோழர்கள் பேச முடியவில்லை. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநிலத் துணைத் தலைவர் விளவை இராமசாமி பேசுகையில்,

“சட்டத்திருத்தம் எனும் பெயரில் வந்த இந்த தாக்குதல் வழக்கறிஞர்களுக்கு மட்டும் எதிரானதல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரானது.

இந்த சட்ட திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என தமிழ்நாட்டின் அனைத்து பிரிவினரும் பாதிக்கப்படுவோம்.

ndlf-kovai-demo-in-solidarity-with-lawyers-1இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் இது போல வழக்கறிஞர்களுக்கு எதிரான வாய்ப்பூட்டு இல்லை. இது தமிழகத்தில் மட்டும் வருவதற்கு காரணம், அணு உலைகளுக்கு எதிரான எதிர்ப்பை இல்லாமல் செய்ய வேண்டும். மீத்தேன் திட்டம் தடையின்றி நிறைவேற வேண்டும். நியூட்ரினோ திட்டம் நிறைவேற வேண்டும். கார்ப்பரேட்டுகள் தமிழகத்தில் தங்கள் சுரண்டலை தடங்கலின்றி நிறைவேற்ற வேண்டும் தமிழகத் தொழிலாளர்களின் போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இப்படி ஒரு விரிவான சூழ்ச்சியின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் என நாம் பார்க்க வேண்டும்.

வழக்கறிஞர்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டால் நாளை தமிழகத்தில் போராடும் விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒடுக்கப்படுவோம். வழக்கறிஞர்கள் மீதான சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கமே நீதிமன்றத்தை ஆர்‌.டி‌.ஓ அலுவலகம் போல மாற்றுவது ஆகும். வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு விட்டால் நீதிமன்றத்தில் யாருடைய ஆதிக்கம் அரங்கேறும்? நீதிபதிகளுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டத்தின் கொட்டமே அதிகமாகும். ஜாமீனுக்கு இவ்வளவு ரேட் என நிர்ணயம் செய்யப்படும். ஆர்‌.டி‌.ஓ அலுவலகத்தில் லைசென்ஸ் கொடுக்க, பெயர் மாற்றம் செய்ய தொகை போல நீதிமன்றத்திலும் நடக்கும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சட்டத் திருத்தத்தை எதிர்கள் சுலபமாக திரும்பப் பெற மாட்டார்கள் வழக்கறிஞர்கள் தொழிலாளிகள், விவசாயிகள் என தமிழக மக்களோடு இணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதைத் தவிர வேறு மார்க்கமில்லை. மனிதச் சங்கிலி உண்ணாவிரதம் புறக்கணிப்பு போன்ற போராட்டங்களை எதிரிகள் சுலபமாக ஜீரணித்து விடுவார்கள்.

எனவே பாட்டாளி வர்க்கம் தனது தோள்களில் இந்தப் போராட்டத்தை பல்வேறு வகைகளில் நடத்த வேண்டும். இதனை உணர்ந்து உடனே விழித்துக் கொள்ள வேண்டும். இருந்த காலம் காத்திருக்கிறது. எதிர்கொள்ள தயாராவோம்” என்று பேசி முடித்தார்

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைதாகி இரவில் விடுவிக்கப்பட்டனர்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

2. அ.தி.மு.க அலுவலகமாக மாறிய விருதை அரசு கலைக்கல்லூரி – பு.மா.இ.மு முற்றுகை போராட்டம்

rsyf-struggle-in-virudai-govt-arts-college-12016-2017-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை விருதை திருகொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த சேர்க்கைக்கு முதல் கலந்தாய்வு இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்றது. அந்த கலந்தாய்வின் போதே மாணவர்களை மதிப்பெண் மற்றும் இட ஒதிக்கீடு அடிப்படையில் சேர்க்காமல் அரசியல் கட்சிகளின் சிபாரிசுக்கு முன்னுரிமை கொடுப்பது நடந்தது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எரிச்சலையும், கவலையையும் ஏற்படுத்தி இருந்தது. கல்லூரி வளாகத்தின் வாயிலில் தனியார் கல்லூரிகள் ஸ்டால் போட்டு தங்கள் கல்லூரிக்கு ஆள் பிடித்தனர்.

இருந்தாலும் விருதை சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து வரும் ஏழை விவசாய பின்னணி கொண்ட மாணவர்களுக்கு இக்கல்லூரியே அடைக்கலம். அதனால் இரண்டாம் கலந்தாய்வு வரை காத்திருந்து பலர் 12-07-2016 அன்று வந்திருந்தனர். இந்த கலந்தாய்வு தொடங்கிய ஆரம்பம் முதலே கட்சிகாரர்களின் லெட்டர் பேடுகள் அனைத்து துறை தலைவர்களிடம் சென்று சிபாரிசு செய்தது. மேலும் இந்த கலந்தாய்வில் தகுதியான மாணவர்களை புறக்கணித்து அவர்களை வெளியே அனுப்ப அவர்கள் கலந்தாய்வுக்கு கால தாமதம் என காரணம் கூறியது கல்லூரி நிர்வாகம். ஆனால் கலந்தாய்வுக்கு தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டது நேரம் அறிவிக்கப்படவில்லை. 10.15 மணிக்கு வந்த மாணவர்களை கூட வெளியே அனுப்பியது. அந்த மாணவர்கள் பு.மா.இ.மு தோழர்களிடம் தகவல் கூறினர்.

இதையடுத்து பு.மா.இ.மு தோழர்கள் கல்லூரியில் விசாரிக்க சென்றனர். அப்போது அரசு கலைக் கல்லூரி அ.தி.மு.க கட்சி அலுவலகம் போல் காட்சி அளித்தது. இதையடுத்து மாணவர்களின் புகார் குறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கலாவதியிடம் பேச சென்ற பு.மா.இ.மு செயலாளர் தோழர் மணிவாசகத்திடம், “உன்னிடம் பேச முடியாது வெளியே போ” என பேசி அனுப்பினார். இதையடுத்து தோழர்களும் மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். தோழர்கள் முழக்கமிட்டு சென்றதை பார்த்த பெற்றோர்கள், மாணவர்கள் அங்கு திரண்டனர்.

உடன் வந்த போலிஸ், “இது போல் கல்லூரியில் போராடக் கூடாது” என்று போராட்டத்தை தடுத்து நிறுத்தியது.

“இது எங்கள் உரிமை நீங்கள் உள்ளே வந்தது தான் தவறு” என தோழர்கள் எதிர்த்து பேசியவுடன் அமைதியாகிவிட்டது.

கல்லூரி முதல்வரோ போலிஸிடம், “இவர்கள் என்னை வேலை செய்ய விடாமல் தடுத்து விட்டார்கள்” எனப் புகார் அளிப்பதாகக் கூறினார்.

“நீங்கள் என்ன வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் அதற்கு அஞ்சமாட்டோம்இங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் அறிவிக்கப்படும்” என கல்லூரி முதல்வரிடம் கூறினர்.

மாணவர்கள் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயார் என தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விருதை 88703 81056.

3. கல்லூரி மாணவர்களுக்கு பு.மா.இ.மு வரவேற்பு – திரு அ.கோவிந்தசாமி கலை & அறிவியல் அரசினர் கல்லூரி, திண்டிவனம்

04-07-2016 அன்று முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களையும், பேராசிரியர்களையும், பொறுப்பு முதல்வரையும், ஊழியர்களையும், கல்லூரி மாணவர்களை தினமும் ஏற்றிவரும் ஆட்டோ, ஓட்டுநர்கள் மற்றும் அரசு போக்குவரத்து ஓட்டுநர், நடத்துனர்களையும் வரவேற்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF) சார்பாக இனிப்பு வழங்கி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்லூரி பொறுப்பு முதல்வர், வரலாற்றுத் துறை எச்.ஓ.டி உஷா ரகோதம் நிகழ்ச்சியின் இறுதிவரை உடனிருந்தனர். இந்த கல்லூரி மாணவர்களை சமூகப் பொறுப்புள்ளவர்களாக வளர்த்து விடுங்கள் என்று கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திண்டிவனம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க