Saturday, April 19, 2025
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்ஒரு கார்ட்டூனிஸ்டின் தூரிகையில் காஷ்மீரின் வலி !

ஒரு கார்ட்டூனிஸ்டின் தூரிகையில் காஷ்மீரின் வலி !

-

ன்றைய காஷ்மீரின் இருண்ட பக்கத்தை வலிமையான தனது கேலிச்சித்திரங்களில் உணர்த்துகிறார் கிரேட்டர் காஷ்மீர் தினசரியில் பணிபுரியும் சுஹைல் நக்ஷ்பந்தி.

சுஹைல் நக்ஷ்பந்தி சமீபத்தில் வரைந்த கார்ட்டூன் ஒன்றில், முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, பேலட் குண்டுகளால் முகம் சிதைக்கப்பட்ட இளஞ்சிறார்களை இருண்ட எதிர்காலத்திற்கு வரவேற்கிறார்.

dark-future

மற்றொரு கார்ட்டூனில் காஷ்மீரை ஆளும் கட்சிகள் மாறி மாறி மக்கள் மரணத்தை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவதை தோலுரிக்கிறார். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வைத்து 2010-ம் ஆண்டு முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவை கேள்வி கேட்கிறார், மெகபூபா முஃப்தி. 2016-ல் அதே கேள்வியை ஓமர் அப்துல்லா, முதலமைச்சர் மெகபூபாவைப் பார்த்து கேட்கிறார்.

2010-now

பொதுவில் எத்தகைய போர்க்களங்களிலும் ஆம்புலன்ஸ்களை அனுமதிப்பார்கள். காஷ்மீரில் மட்டும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும், வண்டிகளும் பாதுகாப்பு படைகளால் தாக்கப்படுகின்றனர். சில சமயம் காயமடைந்த மக்களை சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ்களைக் கூட இராணுவம் அனுமதிப்பதில்லை என்கிறார் சுஹைல்.

ambulance

சமூகவலைத்தளங்களில் அதிவேகத்தில் பரவிய கார்ட்டூன் ஒன்றில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் “இன்சனியாத், ஜம்ஹூரியாத்” எனும் மனிதாபிமானம் மற்றும் ஜனநாயக கவித்துவ முழக்கங்களை அம்பலப்படுத்துகிறார் இந்த ஓவியர். ஒரு புறம் மக்களை ஒடுக்கியும் வதைத்தும் வருபவர்கள் மறுபுறம் இப்படி ஜனநாயகம் குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதை இடித்துரைக்கிறார்.

kashmiriyat

முதலமைச்சர் மகபூபா முப்தி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் காஷ்மீர் குறித்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் அணுகுமுறையை மைய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பேசுகிறார்கள். கூண்டுக்குள் சிறைபட்டிருக்கும் மக்கள் “சுதந்திரம், சுதந்திரம் என்று பேசும் போது இவர்கள் வாஜ்பாயி அணுகுமுறை என்று ஓட்டைகளை அடைக்க முயற்சிப்பதை அம்பலப்படுத்துகிறது மற்றொரு கேலிச்சித்திரம்.

freedom

காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் பலர் கொல்லப்பட்ட நிலையில் அங்கே சென்று வந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய காலாவதியான வார்த்தைகளால் பற்றி எறியும் காஷ்மீர் தணியாது என்கிறது மற்றொரு கேலிச்சித்திரம்.

bjp-minister

மக்களின் உயிரைப் போக்காது என்று நியாயப்படுத்தப்பட்ட பேலட் துப்பாக்கிகளால் பல நூறுபேர்களின் முகங்களும், பார்வையும், வாழ்க்கையும் சிதைக்கப்பட்ட பிறகு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு படைகள் அத்துப்பாக்கியை பயன்படுத்துவதில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் அவர் காஷ்மீரை விட்டு சென்ற இரு தினங்களிலேயே பேலட் துப்பாக்கிகள் போராடும் மக்களை குறிபார்த்து சுட்டன. ராஜ்நாத் சிங்கின் முகத்தில் கரி.

refrain

உலகமெங்கும் தடை செய்யப்பட்ட பெலட் துப்பாக்கிகள் பொதுவில் காட்டு விலங்குகளை வேட்டையாடும் வேட்டைக்காரர்கள் மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால் காஷ்மீர் மக்களை விலங்குகளாக கருதி இந்த துப்பாக்கியை பயன்படுத்துவதைப் பார்க்கும் போது காஷ்மீரே ஒரு காடு என்றே அரசுகள் கருதுகிறது என்கிறார் சுஹைல்.

pellet-gun

நன்றி: The Wire   ,   Greater Kashmir

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க