Wednesday, April 23, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விபுதிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் !!

புதிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் !!

-

டலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஊழியர்களை உருவாக்க அன்று ஆங்கிலேயர்கள் மெக்காலே கல்வி திட்டத்தை புகுத்தியதைப்போல, இன்று இந்து-இந்தி-இந்தியா எனும் பார்ப்பனிய தேசியத்தை கட்டுவதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்தவே புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் நவீன மெக்காலே கல்வி திட்டத்தை கொண்டு வருகிறது மோடி அரசு. இதை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி எதிர்க்கிறது.

rsyf-demo-banner-1காவிமயம், கார்ப்பரேட்மயம் இரண்டும் சேர்ந்த ஒட்டுரகம் தான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை (2016). இது, ’இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும், இந்திய கலாச்சார ஒற்றுமைக்கும் சமஸ்கிருதத்தின் பங்களிப்பை கணக்கில் கொண்டு சமஸ்கிருதத்தை கற்றுத்தருவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும்’ என்று கூறுகிறது. இது முற்றிலும் பொய். இதன் நோக்கமே பார்ப்பனர்கள் வேதம் மட்டுமே ஓத பயன்படுத்தக் கூடிய சமஸ்கிருத்தத்தை ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்விவரை திணிப்பதே; தாய்மொழிவழிக் கல்வியை மறுப்பதே.

தரம் என்ற பெயரில் “5-ம் வகுப்பில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு அதற்குமேல் கல்வி இல்லை” என்கிறது. அவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயற்சி அளிக்கப்படுமாம். அதாவது “படிப்பில் பின்தங்கும் ஏழை மாணவர்களுக்கு இனி 5-ம் வகுப்புக்கு மேல் கல்வி இல்லை” என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். அதையும் தாண்டி சிலர் பத்தாம் வகுப்பு வரை சென்றுவிட்டால் அவர்களுக்கு  “Part – A” “Part – B” என்று இரண்டு பிரிவுகளை முன்வைக்கிறது. முதல் பிரிவில் அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்கள் இடம் பெறும். இரணடாம் பிரிவில் தொழிற்கல்வி இடம்பெறும். பத்தாம் வகுப்பிற்கு பிறகு தொழிற்கல்வி போக விரும்பும் மாணவர்கள் “part – B” எனும் இரண்டாம் பிரிவை தேர்ந்து எடுக்கலாம் என்று கூறி மாணவர்களை தரம் பிரிப்பதிலும், தொழிற்கல்விக்கு துரத்துவதிலுமே குறியாக உள்ளது. அதாவது, இரண்டாம் பிரிவு ‘பள்ளி மாணவர்களுக்கு பாதி நேரம் படிப்பு மீதி நேரம் அவனவன் அப்பன் தொழிலை செய்ய வேண்டும்’ என்பதே. இதைதான் பார்ப்பன ராஜாஜி அறிமுகப்படுத்திய குலக் கல்விமுறை என்கிறோம்.

school-students-in-protest-1“உலகளவில் உள்ள 200 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவவும், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கல்விதுறையில் முதலீடு செய்யவும் ஊக்குவிக்கப்படும். கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணம், நன்கொடை, உள்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக்கூடாது. இதற்கென தனியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்” என்கிறது இந்த புதிய கல்விக்கொள்கை. இதன் நோக்கம் கல்வியை கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றி கொள்ளையடிப்பது; அவர்களுக்குத் தேவையான படித்த திறமையான அடிமைகளை உருவாக்குவதுதான்.

இது ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை மறுப்பது மட்டுமல்ல, கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சங்கம் வைப்பதை மறுக்கிறது. மாணவர்களை கல்லூரி வாயிலில் போலீசு பூத் வைத்து கண்காணிப்போம் வேண்டும் எனக் கூறி மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை முற்றிலுமாக பறிக்கிறது. முக்கியமாக, கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு கொண்டு செல்வதன் மூலம் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கிறது.

மொத்தத்தில் இது நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு கல்வியை மறுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் சதித்திட்டம். சூத்திரனுக்கு எதுக்கடா கல்வி? எனும் பார்ப்பனிய மனுதர்மத்தையும், காசு இல்லாதவனுக்கு எதுக்கடா கல்வி? எனும் மறுகாலனியாக்க கொள்கையையும் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்விக்கொள்கை முறியடிக்க ஓரணியில் திரளுமாறு மாணவர்கள், பேராசியர்கள், ஜனநாயக – முற்போக்கு சக்திகளுக்கு அறைகூவல் விடுக்கிறது பு.மா.இ.மு.

1. சென்னை அண்ணாசாலை தபால் நிலையம் எதிரில்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

2. கும்பகோணத்தில்

new-education-policy-kudanthai-demo-1னைத்து பள்ளி, கல்லூரி மாணவர் இயக்கம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தலைமையில் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி முன்பாக 24-8-2016 காலை சுமார் 9.30 மணியளவில் புதியக் கல்விக் கொள்கை-2016ஐ கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர் சங்கத்தமிழன் தலைமையில் நடைபெற்றது. அவர் பேசுகையில், “புதிய கல்விகொள்கை அமுல் படுத்தப்பட்டால் ஒரு காலத்தில் சூத்திரன் படிக்க கூடாது. இப்போ காசு இல்லாதவன் படிக்க கூடாது. திரும்பவும் குலத்தொழில் செய்யவேண்டிய நிலை உருவாகும். கல்லூரி, பள்ளி அனைத்தும் தனியார் மயமாகிவிடும். மாநில உரிமை பறிக்கப்படும் நிலை உருவாகிவிடும்” என்று புதியக் கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தி பேசினார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத் தோழர் ஜெயபாண்டியன் பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விக்கொள்கையை உட்புகுத்தும் விதமாக மத்திய அரசு செயல்படுகிறது என்பதற்கு உதாரணமாக தான் கல்விக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஆர்.எஸ்.எஸ் காரர்ககளை புதிய கல்விகொள்கை கமிட்டி தலைவராக நியமித்துள்ளது” என்று மத்திய அரசுசின் சதித்தனத்தை அம்பலப்படுத்தினார்.

தோழர் தமிழ் பேசுகையில் “மாணவர்கள் மக்கள் பிரச்சனைக்காக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அதனால் இவர்களை ஒருங்கிணையாமல் மாணவர்களை அரசியல் அற்றவர்களாக மாற்றிவிடும்” என்று புதியக் கல்வி கொள்கையின் சதிதிட்டத்தை அம்பலப் படுத்தினார்.

new-education-policy-kudanthai-demo-2தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கும்பகோணம்

3. காஞ்சிபுரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
காஞ்சிபுரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க