Monday, April 21, 2025
முகப்புகலைகவிதைதாயாக இருந்திராத இந்தப் பூமிக்கு எப்படி வந்து சேர்ந்தோம் ?

தாயாக இருந்திராத இந்தப் பூமிக்கு எப்படி வந்து சேர்ந்தோம் ?

-

குகைகள்

வர்களின்
மிருகவெறி அக்கிரமங்கள்
என் இதயத்தைக்குடைந்து
எத்தனையோ
குகைகளை உருவாக்கியிருக்கின்றன

caste3மாறிவரும் காலத்தைக் கவனித்தவாறு
கவனமாக
அடியெடுத்து வைக்க வேண்டும்
இந்தக் காட்டிற்குள்
காற்று எங்கள் பக்கம்

அங்குமிங்குமாய்க்
கலகத் தீப்பொறி பறக்கிறது

இத்தனைநாள் –
சரிதவறு இரண்டையும் கேட்பேன்;
மவுனமாக இருந்துகொள்வேன்

ஆனால் இனி நான்
மனித உரிமைகளுக்காக
எரிதழல் மூட்டுவேன்!

எப்படி வந்து சேர்ந்தோம்
இங்கே….
என்றுமே எமக்குத்
தாயாக இருந்திராத
இந்தப் பூமிக்கு?

ஒரு நாயாய், பூனையாய்க் கூட
எங்களை வாழ விடாத
இந்தப் பூமிக்குப்
பின் எப்படித்தான்
வந்து சேர்ந்தோம்?

மன்னிக்கவே முடியாத
அவர்களின் குற்றங்களே சாட்சிகள்
இதோ இங்கே
இப்போதே
நான் எழுகிறேன்
ஒரு கலகக்காரனாக

ஜோதி லஞ்சேவார்

***

அந்த ஒற்றைக் கை

டங்கள் நிறைந்த புத்தகமொன்றைப்
புரட்டிக் கொண்டிருந்தேன்
எனது குட்டிப் பையன் ராஜா வந்தான்
தானும் எட்டிப் பார்த்தான்.

ஒரு படத்தில் –
ஏழை ஒருவனைப் பணக்காரன்
அடித்துக் கொண்டிருந்தான்.

ராஜா கேட்டான்:
’இவனை ஏம்பா அவன் அடிக்கிறான்?’
ஏனென்றால் அவன் பண்ணைக்காரன்.

அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்
மீண்டும் அதே பணக்காரன்-அவனது
ஓங்கிய வலது கையில் ஆயதம்
அதே ஏழையைக் கொல்ல.

ராஜா இதைப் பார்த்தான்.
’ஒரு நிமிஷம் இருப்பா’ –
எனக் கட்டளையிட்டான்.

no-entry-for-the-new-sunவேகமாக மேசைக்கு ஓடிப்போய்
பிளேடு ஒன்றைக் கொண்டு வந்தான்.

பணக்காரனின்
வலது கரத்தை தோளிலிருந்து
வெட்டி எடுத்து விட்டான்
பெருமிதம் அவன் முகத்தில்

நான் சொன்னேன்
அவனுக்கு ஆள்பலம் அதிகம்
சும்மா விடமாட்டார்கள்

ராஜா இடைமறித்தான் –
முடியாது, அவர்கள் அடிக்கமுடியாது
அந்த ஒற்றைக் கரத்தின் நினைப்பு
ஒரு போதும் மறவாது அவர்களுக்கு

திரியம்பக சப்காலே

’புதிய சூரியனுக்கு அனுமதி இல்லை’ நவீன மராத்தி தலித் கவிதைகள் – ஆங்கில நூலிலிருந்து மொழியாக்கம்.

புதிய கலாச்சாரம், ஜூன், ஜூலை 1994.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க