ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பாரதிய ஜனதாவுக்கு டெல்லிக்கட்டு நடத்தினார்கள் தமிழக மக்கள். மோடி எதிர்ப்பு முழக்கம் தமிழ் மக்களின் தேசிய முழக்கமானது. ஆத்திரமுற்ற பாஜக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அனுப்பியது. வந்தவரோ அந்த ஆத்திரத்தை பலமடங்கு கூட்டிவிட்டார்.

எவ்வளவுதான் பணிவாகப் பேசுவதாக நினைத்து பேசினாலும் அல்லது முயற்சி செய்தாலும் பார்ப்பனத் திமிரும், மேட்டிமைத் தனமும் தான் அவரின் பேச்சில் இயல்பாக வெளிப்படுகிறது. உடல் மொழியே மிதமிஞ்சிய அலட்சியத்துடன் மிரட்டுகிறது. அதனால் தான் அவர் பேட்டிக்கு YOUTUBE -ல் வெறுப்புக்கள் குவிந்து வருகின்றது.
“நுணலும் அதாவது தவளையும் தன் வாயாலே கெடும். பாஜக-வும் தன் கையாலே புழுதி வாரித் தூற்றிக் கொள்ளும்.”