Monday, April 28, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்விவசாயத்தின் அழிவு வளர்ச்சியா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2017

விவசாயத்தின் அழிவு வளர்ச்சியா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2017

-

ந்தியா முழுவதும் விவசாயிகளின் தற்கொலை நடந்த காலத்தில் தமிழ கத்தில் விதிவிலக்காக சில மரணங்கள் மட்டும் இருந்தன. ஆனால் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கே மரித்து விட்டனர். காவிரி டெல்டா மட்டுமல்ல, கன்னியாகுமரி தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் வரை, கடலூர் தொடங்கி ஒசூர் வரை எங்கும் விவ சாயம் மாபெரும் அழிவை சந்தித்து வருகிறது.

சென்ற ஆண்டு கர்நாடகத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்த நேரத்தில்தான், மோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் குறைந்திருப்பதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் அறிவித்தார். விவசாயிகளின் தற்கொலைகளுக்கு கடன் சுமையோ, விவசா யப் பிரச்சினைகளோ அல்ல தனிப்பட்ட குடும்ப பிரச்சினகளே காரணம் என்றார் இவர். தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் நடந்திருக்கும் விவசாயிகளின் மரணங்களுக்கும் ஒ.பி.எஸ் அரசு இப்படித்தான் வக்கிரமாக விளக்கம் சொல்கிறது.

நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும் ஏரி குளங்களை தூர்வாறுவதற்கும் கால் வாய்களை தூர்வாறுவதற்கும், அரசாங்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக் கணக்கான ரூபாய்களை ஒதுக்குகின்றன. அந்த பணம் எங்கே? ராம் மோகன் ராவ் என்ற ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தமிழகத்தின் மணல் கொள்ளையை வடிவ மைத்தார். பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்கு வழிவகை செய்த அவரைதலைமைச் செயலாளராக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா.

விவசாய நிலங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கும் தரகு முதலாளிகளுக் கும் தாரை வார்ப்பதில் மோடி அரசு, காங்கிரசு அரசுடன் போட்டி போடு கிறது. விவசாயத்தின் அழிவு என்பது நதி நீர் பிரச்சினை காரணமாகவோ, பருவமழை பொய்ப்பதன் காரணமாகவோ எதிர்பாராமல் நடக்கவில்லை. கெயில் குழாயும் மீத்தேன்திட்டமும் விவசாயத்தை அழிப்பது என்ற திட்டத் தின் அடிப்படையில் நடப்பவைதான்.

“ஏர் பின்னது உலகு” என்பது வள்ளுவன் காலத்து உண்மையல்ல. இன் றைய எதார்த்தம். நமது நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதும், மொத்த மக்கட்தொகைக்கும் சோறு போடு வதும் விவசாயம்தான். விவசாயிகளின் தற்கொலையும், விவசாயத்தின் அழிவும் நாடு எதிர்கொள்ளவிருக்கும் பேரழிவுக்கான அறிகுறிகள். இந்த அழிவைத்தான் வளர்ச்சி என்று கொண்டாடுகிறது மோடி அரசு.

அழிவு தமிழகத்தின் கதவைத் தட்டுகிறது. விழித்துக் கொள்வோம்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • அரசுப் பெருச்சாளியிடம் அவதிப்படும் விவசாயிகள்
  • மரபணு பயிர் அனுமதி: விவசாயத்தைத் தூக்கிலேற்றும் மோடி!
  • மரத்வாடா சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி!
  • விதர்பா ! தொடரும் விவசாயிகளின் வேதனை!!
  • குஜராத் கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஒட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!
  • நம்மாழ்வார்: ஒரு இயற்கை வேளாண்மை மீட்புப் போராளி!
  • நில அபகரிப்பே – இனி விவசாயக் கொள்கை!
  • கெயில் தீர்ப்பு : ராமன் பாலத்துக்கு நீதி விவசாயி நிலத்துக்கு அநீதி!
  • விவசாயிகள் வாழ்வை அழிக்கும் G-9 வாழை விவசாயம்
  • இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்!
  • காவிரி : தேசிய ஒருமைப்பாட்டை நிறுத்து!
  • விவசாயிகள் தற்கொலை: மோடியின் பொய்யும் புரட்டும்
  • காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன்? – நேரடி ரிப்போர்ட்

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க