Tuesday, April 22, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஓசூரில் குற்றவாளி ஜெயா படத்தை நீக்கிய பள்ளி மாணவர்கள் !

ஓசூரில் குற்றவாளி ஜெயா படத்தை நீக்கிய பள்ளி மாணவர்கள் !

-

சூரில் பாடப் புத்தகங்களில் உள்ள தண்டனைக் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப் படத்தின் மீது திருவள்ளுவர் உருவப்படம் பொருந்திய ஸ்டிக்கர் ஒட்டி மாணவர்கள் எதிர்ப்பு!

21-02-2017 செவ்வாய் மாலை 4 மணியளவில் ஒசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மாணவர்களின் பாடப் புத்தகங்களில் ஜெயலலிதாவின் உருவப் படத்தின் மீது திருவள்ளுவர் உருவப் படத்தை ஒட்டி மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்பினர்எதிர்ப்புத் தெரிவித்தனர். பிறகு திரளான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

திருட்டுத்தனமாக சொத்து சேர்த்த வழக்கில் ஏ1 குற்றவாளியான ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டவர்களின் குற்றம் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தண்டனைக் குற்றவாளி என்பது உச்சநீதிமன்றத்தாலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் அவரது படம் நீக்கப்பட வேண்டும்; அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்ற பெயர்கள் நீக்கப்பட்டு அரசு பெயரில் மாற்றப்படவேண்டும். ஆனால், இந்த அரசு குறைந்த பட்சம் இந்த நியாயத்தைக் கூட கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. நீதிமன்றமும் இந்த விசயத்தை தானாக முன்வந்து வலியுறுத்தவோ, நிலைநாட்டவோ போவதில்லை.

காரணம், இந்த அரசுக் கட்டமைப்பு ஊழல் மயமாகிவிட்டது. அதனால், தண்டனை குற்றவாளி கிரிமினல் ஜெயலலிதாவின் படத்தை மக்களே அணிதிரண்டு அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்பினர் முழக்கமிட்டு ஆர்ப்பாடம் செய்தனர். இன்று மாலை ஒசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்பாக மாணவர்களுக்கு அறிவித்து மாணவர்களின் பாடப் புத்தகங்களில் உள்ள ஜெயாவின் உருவப் படத்தின் மீது திருவள்ளுவர் ஸ்டிக்கர் ஒட்டினர்.

மாணவர்களும் திரளாக நின்று தங்கள் பாடப் புத்தகங்களில் உள்ள ஜெயா படத்தின் மீது திருவள்ளுவர் ஸ்டிக்கரைக் கேட்டு பெற்று ஒட்டினர். வியாபரிகளும் பொதுமக்களும் இதுதான் சரியான போராட்டம் என்று ஆதரித்தனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு.வின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னணித் தோழர்கள் காந்தராஜ், ராமசாமி, செல்வி மற்றும் பலரும் பங்கேற்றனர்.

ஆர்பாட்டம் துவங்குவதற்கு முன்பு பள்ளியின் அருகிள் உள்ள கடைகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது, பிரசுரத்தை பார்த்தவுடன், யாரும் இப்படி சுட்டிகாட்ட முன்வரவில்லை நீங்கள் செய்வது எடுத்துக்காட்டாக உள்ளது என ஆதரித்தார்கள். பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும்  ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

நாம் ஒருசில மாணவர்களின் நோட்டு, புத்தகங்களில் திருவள்ளுவர் உருவப் படத்தை ஒட்டினோம், பின்னர் மாணவர்களே முன் வந்து மூன்று, நான்கு என திருவள்ளுவர் படத்தை நம்மிடம் கேட்டு வாங்கி தனது பாட புத்தகம், நோட்டுகளில் உள்ள ஜெயா உருவப் படத்தை மறைத்து அதன்மீது திருவள்ளுவர் உருவப் ஒட்டினார்கள். மேலும், கடைகாரர்கள், ஆசிரியர்கள், பேருந்தில் செல்லும் பொது மக்கள், மாணவர்கள் என அனைவரும் இந்தப்போராட்டத்தை கவனித்து ஆதரவு கொடுத்துச்சென்றார்கள். முன்னதாக, கடந்த இரண்டுநாட்களாக “குற்றவாளிக்கு அரசு மரியாதையா?” என்ற தலைப்பில் முழக்கவடிவில் துண்டறிக்கை அச்சிட்டு மக்களிடையே வீடுகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
செய்தியாளர், புதிய ஜனநாயகம்,
ஓசூர். செல்-9944958840.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க