
சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்கள், பாடப்புத்தகங்கள், விலையில்லாப் பொருட்கள், உப்பு முதல் உணவங்கள் வரை அனைத்திலும் வைத்திருப்பதை உடனடியாக அகற்ற வேண்டும், மெரினாவில் அவரது சமாதியை அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கடந்த 15.2.2017 -ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. அதன் பின்பு கடந்த 18, 20 தேதிகளில் இந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றது.
குற்றவாளியின் பெயரால் ஆட்சி நடத்துவது, அரசு திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மாணவர்களுக்கு, இளைய தலைமுறைக்கு நாம் என்ன கற்றுத்தரப் போகிறோம் ? தீண்டாமை, குடி, போதைப்பழக்கம் ஆகியவை தவறென்றும் குற்றமென்றும் போதிக்கின்ற நாம் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைப் போற்றுவது சரியா ? குடி குடியைக் கெடுக்கும், புகைப்பழக்கம் உடல் நலத்துக்குக்கேடு, வாய்மையே வெல்லும் என்றெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி விட்டு அதற்கு எதிராக செயல்படுவது சரியா ? என்று கேள்வி எழுப்பியதோடு, குற்றவாளி ஜெயலலிதாவின் படங்கள், சின்னங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்றும் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெயா படத்தை மக்களே அழித்து வருகின்றனர். இதைக்கண்டு அதிர்ந்துபோன திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் ’அம்மா’ என்ற பெயரையும், ஜெயா படத்தையும் தாங்களே மறைத்துள்ளனர்.
( படங்களை பெரிதாக பார்க்க அதன்மேல் அழுத்தவும் )
தகவல்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
***
சென்னையில் குற்றவாளி ஜெயாவின் படங்கள் அகற்றம்
( படங்களை பெரிதாக பார்க்க அதன்மேல் அழுத்தவும் )
தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
***
திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது – பத்திரிகை செய்திகள்
( படங்களை பெரிதாக பார்க்க அதன்மேல் அழுத்தவும் )
தகவல்
மக்கள் அதிகாரம், திருச்சி.