Tuesday, April 22, 2025
முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்சிதம்பரம் - விருதை பகுதிகளில் பகத்சிங் நினைவுதினப் பிரச்சாரம்

சிதம்பரம் – விருதை பகுதிகளில் பகத்சிங் நினைவுதினப் பிரச்சாரம்

-

மார்ச் -23 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் – நினைவுதினம் !

1991 – தனியார்மயம், தாராளமயம், உலகமயம் இந்தியாவில் திணிக்கப்பட்டதன் விளைவுகளை இன்று காண்கிறோம். இன்று விவசாயம் அழிவை நோக்கி நகர்கிறது, இளைஞர்களுக்கான வேலையில்லா திண்டாட்டம், கல்வி காசுக்காகவும், தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவும், இயற்கை வளங்களை சூறையாடவும் இதனை எதிர்க்கும் மக்களின் சுய உரிமையை பொசுக்க ராணுவம், காவல்துறை கட்டவிழ்த்தும் விடப்படுகிறது.

மேலும் இதற்கு பொருத்தமாய் பார்ப்பனியத்தை கடைபிடிக்கும் RSS-BJP-ABVP கும்பல் முதலாளிகளுக்காக வேலை செய்கிறது.

  • இயற்கை வைட்டமின் நிறைந்த மாட்டுக்கறியை சாப்பிட்டால் அடித்துக் கொல்கிறது
  • தொழில் நிமித்தம் மாட்டுத்தோலை உரிக்கும் தலித்துக்களை பிடித்து அடிக்கிறது BJP
  • ரோகித் வெமுலா படுகொலை, கண்ணையகுமாருக்கு அடி, சிறை, தலையை துண்டிப்பேன் என மிரட்டல், என் தந்தை போரில்தான் இறந்தார் என்று சொன்ன மாணவியை பாலியல் பலாத்காரம் செய்வேன் என மிரட்டுகிறது ABVP வானரக் கும்பல்

பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு  எதிராக உள்ள தமிழக மக்களையும் தொடர்ந்து நசுக்கிறது. காவிரி நீர் – மேலாண்மை வாரியம் மறுப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம் – கடன் தள்ளுபடி இல்லை, நியூட்டிரினோ, மீத்தேன் ஹைட்ரோ கார்பன், கெயில், இணையம் துறைமுகம், ரேசனில் பொருட்கள் இல்லை, நீட் தேர்விற்கு விலக்கு இல்லை என்று பல்வேறு திணிப்புகளை செய்கிறது. எனினும் தமிழகத்தின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு அனுமதி மறுப்புக்கு எதிராக RSS – BJP மோடிக் கும்பலை கிழித்தெறிந்தது, தமிழகத்தின் இளைய சமூகம்.

இதே மெரினா புரட்சியை நாளை விவசாயிகளுக்காகவும், சமூக மாற்றத்திற்கான கல்விக்காகவும், ஏகாதிபத்திய முதலாளிகளின் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும் போராட பகத்சிங் நினைவுகளை நெஞ்சிலேந்துவோம். இது தொடர்பான துண்டறிக்கைகள் பரவலாக விநியோகிக்கப்பட்டு, சிதம்பரம் – விருதை பகுதிகளில் கிராமங்களிலும், கல்லூரிகளிலும் கூட்டங்கள் நடைபெற்றன. பெருந்திரளான மக்களும், மாணவர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

தகவல்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
விருதை – சிதம்பரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க