Tuesday, April 29, 2025
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுகளச்செய்திகள் : விவசாயிகள் கூட்டத்திற்கு மூன்றாவது முறையாக தடை !

களச்செய்திகள் : விவசாயிகள் கூட்டத்திற்கு மூன்றாவது முறையாக தடை !

-

14.04.2017

அறிவிப்பு

விவசாயிகளின் கோரிக்கைகள் – போராட்டங்கள் எல்லா கதவுகளும் மூடப்பட்டுவிட்டன ! உடைப்பதை தவிர வேறு  வழியே இல்லை ! என்ற தலைப்பின் கீழ் திருத்துறைப்பூண்டியில் 15.04.2017 பொதுக்கூட்டம் நடத்த  திடமிட்டு இருந்தோம் ஆனால் திருவாரூர் மாவட்டக் காவல்துறை தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மூன்றாவது முறையாகவும் அனுமதியை மறுத்துள்ளது. கடந்த முறை பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம் மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுக்கூட்ட விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு கடந்த 27.03.2017 அன்று உத்தரவிட்டு இருந்தது.

அதன் பிறகும் கூட எமது  பொதுக்கூட்ட விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது திருவாரூர் மாவட்ட காவல்துறை. திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எமது அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார். டாஸ்மாக்கிற்கு எதிரான எமது சுவரொட்டி வாசகம்  வன்முறையத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் சற்றும் பொருத்தமற்ற, தொடர்பற்ற காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் மக்கள் சொத்தை கொள்ளையடிக்கின்ற, லஞ்ச ஊழலில் ஊறித்திளைக்கின்ற, அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்கின்ற மக்கள் விரோத கட்சிகளுக்கு தாராளமாக அனுமதி கொடுத்து பாதுகாப்பிற்கு நிற்கும் காவல் துறை மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடிவரும் மக்கள் அதிகாரம் அமைப்புக்கு எதிராகவே திட்டமிட்டு செயல்படுகின்றது.

திருவாரூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு கூட போலீசு அனுமதியைப் பெற வேண்டும் என்ற அளவுக்கு ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இவ்வாறு திட்டமிட்டே சட்டப்பூர்வமான வழி முறைகள் அனைத்தும் முடக்கப்படுகின்றன.

எனவே திருத்துறைப்பூண்டியில் 15.04.2017 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் போலீசின் அனுமதி மறுப்பு காரணமாக நடைபெறாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்த நடவடிக்கைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தொடர்ந்து மூன்றாவது முறையாக பொதுக்கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையானது பெரும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருந்துகிறோம்.

தங்கள் :
தோழர்.காளியப்பன்
மாநிலப்பொருளாளர்,மக்கள் அதிகாரம்


மிழகவிவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் வழங்கக் கோரியும், மற்றும் தேசியவங்கிகளில் வாங்கியுள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும் விவசாயிகள் போராட்டத்தை மதிக்காத மத்திய அரசைகண்டித்து., விருத்தாச்சலம் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முண்னணி சார்பாக, பாலக்கரையில் 12.04.2017 அன்று காலை 11:00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை பு.மா.இ.மு தோழர் மணிவாசகன் தலைமயேற்று நடத்தினார். இதில் மோடி அரசு தமிழகத்துக்கு இழைத்துவரும் அநீதிகளான ஹைட்ரோ கார்பன் திட்டம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஆகியவற்றை அம்பலப் படித்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தை திரளான மக்கள் கவனித்துச் சென்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்.

____________________________________________________________________________________

குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே ! அடிக்கவரும் போலீசுக்கு அஞ்சாதே !!
திருப்பூர் – சாமளாபுரத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய பெண்கள் – பொதுமக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் !

  • கொலைவெறித் தாக்குதல் நடத்திய ADSP பாண்டியராஜனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் வரை போராடுவோம் !
  • தமிழகத்தை சுடுகாடாக்கி டாஸ்மாக்கால் வருமானத்தை பெருக்கும் தமிழக அரசை தூக்கியெறிவோம் !
  • டாஸ்மாக்கை திறக்க வரும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீசை விரட்டியடிக்க செருப்பையும் விளக்கமாற்றையும் கையிலேந்துவோம் !

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி.
சென்னை – 98415 58457.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க