மோடி – எடப்பாடி கும்பல் நடத்தியுள்ள அனிதா ’படுகொலையைக்’ கண்டித்தும், நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் இன்று (04-09-2017) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களைக் கலைக்க போலீசை வைத்து கல்லூரி நிர்வாகம் மிரட்டியுள்ளது. போலீசு புமாஇமு தோழர்களை வெளியேறக் கூறியது. மாணவர்கள் போலீசே கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேறு என முழக்கமிட்டனர்.

தமிழகமெங்கும் பற்றிப் பரவட்டும் ! போர்க்குணமிக்க மாணவர் போராட்டங்கள் !
————————————————————–
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி