28 வயதான இளம் பத்திரிக்கையாளர் சந்தனு பெளமிக், போலீசுக்கும், ஐ.பி.எஃப்.டி(IPFT – Indigenous People’s Front of Tripura) என்ற பிரிவினைவாதக் கட்சிக்கும் இடையே நடந்த மோதல் காட்சிகளைப் படம்பிடித்துக் கொண்டிருந்த போது ஐ.பி.எஃப்.டி யைச் சேர்ந்தவர்களால் அடித்தே கொல்லப்பட்டார்.

சி.பி.எம் கட்சி ஆளும் மாநிலமான திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவின் புறநகர்ப்பகுதியான மண்டாய் என்ற இடத்தில் 20.09.2017 அன்று சாலையைத் தடுத்து போராட்டம் நடத்திய ஐ.பி.எஃப்.டி கட்சியினரின் மீது போலீசு தாக்குதலைக் கட்டவிழ்த்து விட, இரு தரப்புக்கும் மோதல் தீவிரமானதை சந்தனு படம்பிடித்துக் கொண்டிருந்த போது தான் இந்தப் படுகொலை நடந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பெங்களூரில் இந்துத்துவா தீவிரவாதிகளால் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான கெளரி லங்கேஷ் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்இரண்டு வாரம் கழித்து பத்திரிக்கையாளர் சந்தானு பெளம்விக்-கும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் 180 நாடுகளில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 136-வது இடத்தில் பின்தங்கி உள்ளது. மோடியின் அரசு 2014-ம் ஆண்டில் பதவியேற்ற பிறகு 2015-ம் ஆண்டில் ஆசிய நாடுகளில் பத்திரிக்கையாளர்களின் உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும் நாடுகளில் முதலிடத்தைப் பிடித்தது.
இந்தியாவில் கலவரம் என்றாலே பாஜக-வின் ஆதரவோ பங்களிப்போ இல்லாமல் எதுவும் நடக்க முடியாது என்ற நிலை தான் இப்போது நிலவுகிறது. திரிபுராவில் சந்தானுவைக் கொன்ற ஐ.பி.எஃப்.டி கட்சி மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது. மேலும் 2018-ல் நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு இது போன்ற கலவரங்களும், கொலைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்பது பாஜக-வின் மனக்கணக்கு.
1996-ல் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற பிரிவினைக் கட்சி தடை செய்யப்பட்டு அதன் உறுப்பினர்கள் காவல்துறையால் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளானார்கள். அப்போது ஆரம்பிக்கப்பட்டதுதான் ஐ.பி.எஃப்.டி கட்சி. திரிபுரா பழங்குடியினருக்கான நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சி நான்கு வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற மாவட்ட அளவிலான கவுன்சில் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்றது.

ஒரு வருடம் கழித்து ஐ.பி.எஃப்.டி, டி.என்.வி(TNV-Tripura National Volunteers) என்ற கட்சியுடன் சேர்ந்து ஐ.என்.பி.டி (INPT-Indigenous Nationalist Party of Tripura ) என்ற கட்சியாக மாறியது.
ஐ.என்.பி.டி 2003, 2008 தேர்தல்களில் மிக மோசமான தோல்வியைத் தழுவியதால் மீண்டும் கட்சி உடைந்து மறுபடியும் ஐ.பி.எஃப்.டி உருவாகியது. 2016-ல் இருந்து இது மீண்டும் பெரிய கட்சியாக மாறியுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலையொட்டி பெங்காலிகளுக்கும், பழங்குடியினருக்கும் இடையே உருவாக்கப்பட்ட மோதல்களில் 30 நபர்கள் பலத்த காயமடைந்தது மட்டுமன்றி 15 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பாஜக-வின் ஆதரவோடு இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஐ.பி.எஃப்.டி இந்தத் தேர்தலில் சி.பி.எம் கட்சிக்கு அடுத்த பெரிய கட்சியாக உருவாகியுள்ளது.
அப்பாவிப் பழங்குடியினரிடம் இனவெறியைத் தூண்டுவதன் மூலம் கூட்டணிக் கட்சியான ஐ.பி.எஃப்.டி-யை வெற்றிபெற வைத்து ஆட்சியில் இடம்பிடிப்பது; பின்னர் மெல்ல மெல்ல காவி வெறியைத் திணித்து இந்துத்துவ ஆட்சியை அமைப்பது என்பது தான் பாஜகவின் எளிய தந்திரம். இதற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் காவிக் கும்பலுக்கு சந்தனு பௌமிக்கின் மரணமெல்லாம் ஒரு பொருட்டல்ல.
மேலும் படிக்க:
In Tripura, why the IPFT is crucial for the BJP?
Political reporter beaten to death in north-east India
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி