Tuesday, April 22, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! தஞ்சை பொதுக்கூட்டம் !

அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! தஞ்சை பொதுக்கூட்டம் !

-

த்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க, அ.தி.மு.க கும்பல்கள் அரங்கேற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகளையும் அராஜகங்களையும் அம்பலப்படுத்தியும், தற்போது நிலவும் அரசுக்கட்டமைப்பில் மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியாது என்பதை விளக்கியும், இந்த கட்டமைப்புக்கு வெளியே நின்று மக்கள் தாங்களே அதிகாரத்தைக் கையிலெடுப்பதன் மூலமே தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்தியும் தஞ்சை மானோஜிப்பட்டி உப்பிலி மண்டபம் அருகில் 29.10.2017 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையேற்க, தோழர்கள் அருள், ராணி, பாலாஜி, சிவாநந்தம் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழகத்தில் டெங்குக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தி மரணங்களைத் தடுப்பதில் படுதோல்வியடைந்த எடப்பாடி அரசின் கயமைத்தனங்களையும், கொள்ளையையும் தோலுரித்து அம்பலப்படுத்திப் பேசினார் திருச்சி மக்கள் அதிகாரம் தோழர் ராஜா.

இறுதியில் சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், ” டெங்குவால் தமிழகமே தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில் எடுபிடி எடப்பாடி அரசு எம்.ஜி.ஆர்-க்கு நூற்றாண்டு விழா என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்கள் பணத்தை வாரியிறைக்கிறது” என அரசின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தினார். உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பதன் மூலம் அரசுக் கட்டமைப்பே கொள்ளையர்களுக்குத் துணை போவதைக் கடுமையாக சாடினார். ஜெயலலிதா மரணத்தை விசாரணை செய்வதன் பெயரில் சசி-தினகரன் கும்பலைக் குற்றவாளியாக்கி எடப்பாடி- பன்னீர் கும்பல் தான் தப்பித்துக்கொள்வதற்கு தமிழகத்தையே பா.ஜ.க காலடியில் தாரைவார்த்து துரோகம் செய்வதை விளக்கினார்.

அறுபது மாதங்கள் கொடுங்கள், புதிய இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன்” என சவடாலடித்து ஆட்சிக்கு வந்த மோடி முப்பதே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததையும்  ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைகள் மூலம் சிறு தொழில், சிறு வணிகம், விவசாயம் ஆகியவற்றை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருப்பதையும், இந்து மதவெறி பாசிசத்தை வெறி கொண்டு அமல்படுத்துவதால் ஏற்படப்போகும் அபாயத்தையும் விளக்கினார். உழைக்கும் மக்களாகிய நாம் அதிகாரத்தைக் கையிலெடுத்து மாற்று அமைப்பை உருவாக்குவதை நோக்கி சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியில் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்று அனைவரின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை.

தொடர்புக்கு: 94431 88285

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க