Saturday, April 26, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விநவம்பர் 19 கூட்டம்: மார்க்ஸின் மூலதனம் 150, ரசியப் புரட்சி 100 !

நவம்பர் 19 கூட்டம்: மார்க்ஸின் மூலதனம் 150, ரசியப் புரட்சி 100 !

-

கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!

சென்னையில் மாபெரும் கூட்டம்

19 நவம்பர், 2017 மாலை 4:00 மணி,
ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம்.
சென்னை – 600 035. அனைவரும் வருக!

ண்பர்களே,

ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.

நிகழ்ச்சி நிரல் :

  • கருத்துப்படக் காட்சி – மாலை 3.00 மணி

அரங்க நிகழ்ச்சி :

தலைமை :

தோழர் அ. முகுந்தன், தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

உரையாற்றுவோர் :

தோழர் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், மூலதனம் தமிழ்ப்பதிப்பின் மொழிபெயர்பாளர்.

தோழர் எஸ். பாலன், வழக்கறிஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

தோழர் மருதையன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

கலை நிகழ்ச்சி :

ம.க.இ.க. கலைக்குழு
நவம்பர் புரட்சி தொடர்பான திரைப் பதிவுகள்.

நன்றியுரை :

தோழர் த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

 

பெரும் பொருட்செலவுடன் நடைபெறும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வு நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங்கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!

 

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க