Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்தால் வழக்கு போடும் போலீசு !

தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்தால் வழக்கு போடும் போலீசு !

-

6வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் !

திருப்பூர் மாவட்டத்தில் 463 பேருந்துகளில் இன்றுவரை (09.01.2018) 35% அரசு பேருந்துகள் தான் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வெளியூர் செல்வதற்கு தனியார் பஸ் கட்டணம் 50-100 ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்படுகிறது, இரவு பேருந்துகள் இயங்கவில்லை.

RTO அதிகாரிகள் மணல் லாரி, பள்ளிப்பேருந்து, ரோடுவேஸ் டிரைவர்களை வளைத்து பிடித்து, அவர்களைக் கொண்டு அந்த 35% பஸ்களை இயக்குகிறார். ஆளும்கட்சி தொழிற்சங்க டிரைவர்கள் கூட போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர், “பிடித்தமான வேலைக்கு சென்றுவிடுங்கள் என்று நீதிபதி கூறுகிறார் “சுழற்சி முறையில் எங்களுக்கும் நீதிபதி, கலெக்டர், தாசில்தார் RTO பணி கொடுங்கள் நீங்கள் போக்குவரத்து துறையில் வேலை செய்யுங்கள். அது முடியாவிட்டால் காவல்துறையில் SI – Inspector வேலை ஒரு ஆண்டு மட்டும் கொடுங்கள் அதற்கு பின்பு இலவசமாகவே ஓய்வு பெரும்வரை பணியாற்றுகிறோம்” என்றார்.

பெரும்பாலும் தொழிலாளிகள் தங்கள் ஊதியம் என்பதைத் தாண்டி, ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியம் பற்றித்தான் போராட்டங்களில் பேசுகிறார்.

போராட்டம் விரிவடையாமல் பார்த்துககொள்ள பணிக்கு செல்பவர்களை மட்டுமே டெப்போவிற்குள்  அனுமதிக்கிறது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர்.

***

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக நாகைமாவட்டம் சீர்காழி பனிமனை மயிலாடுதுறை பனிமனை பொரையார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் 08.01.2018 அன்று போராட்டத்தை ஆதரித்து சுவரொட்டி ஒட்டிய சீர்காழி பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது மயிலாடுதுறை போலீசு.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க