Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபேருந்து கட்டண உயர்வை கண்டித்து புமாஇமு கோயம்பேடு முற்றுகை !

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து புமாஇமு கோயம்பேடு முற்றுகை !

-

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து 25.01.2018 (இன்று) காலை 11:00 மணியளவில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் கோயம்பேடு பேருந்து நிறுத்த வாயிலில் போராட்டம் நடத்தப்பட்டது.

 

“போக்குவரத்துத்துறையின் நட்டத்திற்கு காரணம் அதிகாரிகள் அமைச்சர்களின் ஊழல் கொள்ளையே! ஆகவே நட்டத்தை ஈடுகட்ட அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வோம்!” என முழக்கங்களை எழுப்பினர்.

கடந்த மூன்று நாட்களாக மாணவர்கள் கட்டண உயர்வை எதிர்த்து போராடும் நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைய வேண்டும். அரசு ஊழியர்கள், செவிலியர்கள், தொழிலாளர்கள் என அனைத்து போராட்டங்களையும் ஒருங்கிணைப்போம். இந்த கட்டண உயர்வை மாற்றும் வரை போராடுவோம் எனக் கூறினர்.

இந்த போராட்டத்தில் பள்ளி – கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என திரளானோர் கலந்துகொண்டனர். சரியாக பேருந்து வாயிலில் இப்போராட்டம் நடைபெற்றதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இப்போராட்டத்தை கவனித்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

போராட்ட முழக்கங்கள் :

  • போக்குவரத்துத்துறை நட்டத்திற்கு காரணம் அதிகாரிகள் – அமைச்சர்கள் ! அவர்களை ஏன் கைது செய்யவில்லை ?
  • போக்குவரத்துத் துரையை ஊழல் முரைகேடுகளால் கொள்ளையடித்த அமைச்சர்கல் – அதிகாரிகள் சொத்துக்களை பறிமுதல் செய் ! நட்டத்தை ஈடுகட்டு !
  • சீட்டு கிழிஞ்சி போச்சு… டாப்பு ஒடஞ்சி போச்சு… வெயிலில காயுறோம் ! மழையில நனையிறோம் என்ன மையி…க்கு கட்டண உயர்வு !
  • பேருந்து காட்டன உயர்வை ஏற்க மறுப்போம் ! கட்டணம் கொடுக்காமல் பயணம் செய்வோம் !
  • போக்குவரத்துத்துறையில் நட்டம் – நடத்தமுடியவில்லை என்றால் அரசு எதற்கு ? ஒதுங்கிக் கொள் ! மக்கள் பார்த்துக் கொள்கிறோம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை, தொடர்புக்கு – 94451 12675.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க