Saturday, April 19, 2025
முகப்புபார்வைஇணையக் கணிப்புமூன்று நாட்களில் ஆர்.எஸ்.எஸ். படை திரட்டினால் ? கருத்துக் கணிப்பு

மூன்று நாட்களில் ஆர்.எஸ்.எஸ். படை திரட்டினால் ? கருத்துக் கணிப்பு

-

ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் மோகன் பகவத் கடந்த பத்து நாட்களாக பீகாரில் முகாமிட்டுள்ளார். அங்கே பல்வேறு சங்கி பரிவார கூட்டங்களோடு பரிசீலனை கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அப்படி ஒரு கூட்டம் முசாஃபர்புர் நகரில் நடைபெற்றது. அதில் பீகார் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்த சங்கி கூட்டத்தினர் கலந்து கொண்டனர்.

இத்தகைய சங்கி கூட்டங்களில் பல்வேறு ஆர்.எஸ்.எஸ் சார்பு இயக்கங்களின் இலக்கு, அணிசேர்க்கை, மற்றும் பஞ்சாயத்துக்களைப் பேசுவார்கள். மோடியின் தலைமையில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது இந்தக் கூட்டங்கள் அடுத்தது என்ன நடவடிக்கை எடுப்போம் என்பதாகவும் நடக்கும். ஏனெனில் தாம்தான் ஆள்கிறோம் என்பதால் சங்கிகள் சில பல ‘போர்’ திட்டங்களை கையில் வைத்திருப்பார்கள்.

எனினும் அந்தக் கூட்டத்தில் மோகன் பகவத் கெத்தோடு கூறிய ஒரு விசயம் ஊடகங்களில் செய்தி பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

“எங்கள் இயக்கம் ஒரு இராணுவ அமைப்பு அல்ல என்றாலும், நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்படுவதை கடைபிடிக்கிறோம். இந்த நாட்டிற்கும், அரசியல் சாசனத்திற்கும் இராணுவம் உடனடியாக தேவைப்படுகிறது என்றால், இராணுவம் அணிசேர்ந்து தயாராவதற்கு 6 முதல் 7 மாதங்கள் ஆகும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மூன்றே நாடகளில் திரண்டு விடுவார்கள். இதுதான் எங்களது ஆற்றல்” என்று பேசினார் மோகன் பகவத்.

எல்லையிலே இராணுவ வீரன் சாகும் போது ஏடிஎம்மிலே நீ மாரடைப்பு வந்து செத்தால் என்ன? என்று பணமதிப்பழிப்பின் போது வசனம் பேசியவர்கள் பார்ப்பனிய இந்துமதவெறியர்கள். இன்று அப்பேற்பட்ட இராணுவமெல்லாம் ஒரு ஜுஜுபி, நாங்கள்தான் உண்மையான இராணுவம் என்று கேலி செய்கிறார்கள். உடனே ராகுல்காந்தி போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் இராணுவத்தை அவமதித்து விட்டார்கள் என்று மன்னிப்பை கோருகிறார்கள்.

இராணுவத்தை வைத்து தேசபக்தியை கிளப்புவதில் பாஜக-வும், காங்கிரசும் சளைப்பதில்லை என்றாலும் ஆர்.எஸ்.எஸ்-ன் பக்தியில் நாட்டுப்பற்று நிறையவே தூக்கலாக இருக்கும். ஏனெனில் இராணுவத்தையே எதிர்க்கிறாய் என்று இவர்கள் தமக்கு பிடிக்காதாரை ‘ஆன்டி-இன்டிய’னாக்கி விடுவார்கள்.

இவற்றையல்லாம் விட ஒரு முக்கியமான விசயம் உண்டு. மூன்று நாட்களில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அணிதிரட்டப்படும் என்றால் நாடு எப்படி ஒரு அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. இத்தகைய துரித அணிதிரட்டலின் அழிவை 2002 குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையில் பார்த்திருக்கிறோம். மோகன் பகவத் திருவாய் நாறியிருக்கும் முசாஃபர்புரம் நகரிலேயே இவர்கள் எவ்வளவு வேகமாக கலவரம் நடத்தி பிறகு தேர்தலில் இந்துமதவெறியை கிளப்பி முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்தை குந்த வைத்தார்கள் என்பதை பார்த்திருக்கிறோம்.

ஆகவே இன்றைய கருத்துக் கணிப்பு:

மூன்றே நாளில் ஆர்.எஸ்.எஸ் படை திரட்ட முடியும் என்று மோகன் பகவத் கூறியிருப்பது?

  • ஏதோ ஒரு ஃபுளோவில் உளறிய ஒன்று கவலைப்படத் தேவையில்லை
  • பாசிச ஆட்சி வருவதை அறிவிக்கும் எச்சரிக்கையாக கவலைப்பட வேண்டும்.
  • இராணுவத்தை அவமதித்திருப்பதுதான் இதில் உள்ள விசயம்
  • தெரியவில்லை