Tuesday, April 22, 2025
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்திருவாரூர் கடம்பங்குடி ஓ.என்.ஜி.சி. காண்ட்ராக்டரை விரட்டிய பொதுமக்கள் !

திருவாரூர் கடம்பங்குடி ஓ.என்.ஜி.சி. காண்ட்ராக்டரை விரட்டிய பொதுமக்கள் !

-

திருவாரூர் கடம்பங்குடி கிராமத்தில் தொடங்கவிருக்கும் ONGC பணிகளுக்கு எதிராக போராடிய தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது அரசு.

அவர்களுக்கு பிணை மனுவில் ஆஜராக தஞ்சாவூர் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் 4 பேரும் கும்பகோணம் வழக்கறிஞர்கள் 3 பேரும் நாகையிலிருந்து ஒரு வழக்கறிஞரும் ஆஜராகிவிட்டு பின்னர் ஊர் மக்களை சந்திக்கலாம் என்று கடம்பங்குடி கிராமத்திற்கு சென்றோம்.

அதே நேரத்தில் முன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்ததால் எளிதாக பணிகளை தொடங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் ஜே.சி.பி. எந்திரத்துடன் கான்ட்ராக்டர் ஊருக்குள் வந்து பணிகளை தொடங்கியிருந்தார். இதனை அறிந்த ஊர்மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அவர்களை முற்றுகையிட்டு போராடிக் கொண்டிருந்தனர்.

சரியாக அந்த நேரத்தில் நாங்கள் அங்கு சென்றதும் ஊர் மக்கள் மேலும் உற்சாகத்துடன் அவர்களை வெளியேற சொல்லி கெடு விதித்தனர். அந்த ஒப்பந்தக்காரர் தான் மாபெரும் யோக்கியன் என்றும் அரசு ஆணைபடி செயல்படுவதாகவும் பசப்பலாக பேசினார். மக்கள் சார்பில் நாங்கள் (வழக்கறிஞர்கள்) அவர்களிடம் பேசி இதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்கூறி உடனே வெளியேறும்படி கூறினோம். அவர்களும்  வேலையை நிறுத்திவிட்டு வெளியேறினர்.

அதன் பின்னர் அங்கிருந்த ஊர் மக்களிடம் அவர்களுக்கு ஆதரவாக ம.உ.பா.மையம் துணை நிற்கும் என்றும் அஞ்சாமல் போராடும் படியும் போராட்டம் ஒன்றே தீர்வு என்றும் எடுத்துக் கூறினோம்.

ஏற்கனவே வீரமிக்க போராட்டத்திற்கு தயாராக இருந்த மக்கள் உங்கள் உதவியிருந்தால் போதும் இந்த போராட்டத்தில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறினர்.

( படங்களைப்  பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க