Monday, April 28, 2025
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுதிருச்சி போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் ! மக்களிடம் கையெழுத்தியக்கம் !

திருச்சி போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் ! மக்களிடம் கையெழுத்தியக்கம் !

-

திருச்சியில் போலீசு ராஜ்ஜியத்திற்கெதிராக கையெழுத்தியக்கம் !

மிழகம் முழுவதும் வாகன சோதனை எனும் போலீசாரின் அத்துமீறலால் பொதுமக்கள் சொல்லிமாளாத்துயரத்திற்கு ஆளாகின்றனர். நள்ளிரவில் கூட குடும்பத்துடன் வருபவர்கள், அவசர அவசரமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகத்துக்கு செல்பவர்கள் என பொதுமக்களை வழிமறித்து இடையூறு செய்கின்றனர்.

மேலும், சந்துக்கு சந்து நின்று கொண்டு வழிப்பறி செய்யும் வகையில் நடந்து கொள்வதுடன் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் வாகன சோதனையின் போது எடத்தெருவைச் சேர்ந்த 25 -வது வார்டு திமுக வட்டச் செயலர் முகேஷ்குமாரின் மனைவி சரஸ்வதி மீது பைக் மோதியதில் பின் தலையில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 26.02.18 அன்று மரணமடைந்தார்.

காவல்துறையினர் ஏற்படுத்தும் விபத்துக்களையும், உயிழப்புகளையும் மற்றும் பொதுமக்களிடம் அத்துமீறி வழிப்பறி செய்வதையும் உடனடியாக நிறுத்தக்கோரி பொதுமக்கள் மத்தியில் 27.02.18 காலை 11 மணியளவில் புத்தூர் நான்கு ரோடு சிக்னலில் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் குமார் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

பொதுமக்கள் உற்சாகமாக கையெழுத்திட்டதுடன், உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும், இதற்க்கெதிராக போராட்டம் நடந்தால் நாங்கள் வருவோம் என்றனர். ஒருவர் தன் கையெழுத்துக்குக் கீழ் “கொள்ளைக்காரனை பிடி அப்பாவி மக்களை தொந்தரவு பண்ணாதே” என எழுதிச் சென்றார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க