Wednesday, April 16, 2025
முகப்புபார்வைஇணையக் கணிப்புஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் – கருத்துக் கணிப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் – கருத்துக் கணிப்பு

-

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என ஏ 1 பெயரில் ஏ 2 -வின் சகோதரி மகன் டிடிவி தினகரன் ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கிறார். இருபது ஆண்டுகள் கொள்ளையடித்த காசை பாதுகாக்கவும், இனி வரும் ஆண்டுகளில் கொள்ளையடிக்கவும், சில எலும்புத் துண்டுகளை முதலீடாகப் போட்டு ஆரம்பித்திருக்கிறார் தினகரன். அதுவும் இக்கட்சி இடைக்காலம்தானாம். முழுக்காலமாக வரவேண்டிய அவசியமில்லாமல் அதிமுகவை கைப்பற்றி இரட்டை இலை சின்னத்தை மீட்பாராம்.

இனி கருத்துக் கணிப்பு கேள்வி :

டிடிவி தினகரனது புதிய கட்சி துவக்கம் – உங்களது கருத்து என்ன?

1. பச்சமுத்து, வைகுண்டராசன் டி.வி வகையறாக்கள் இந்த வாரம் முழுக்க செய்தியிலும், விவாதங்களிலும் இக்கட்சியின் கொள்கைகளை விவாதப் பொருளாக்கி ஜனநாயகத்தைக் கொல்வார்கள்.

2. எடப்பாடி – ஓபிஎஸ் அணியா, சசிகலா – தினகரன் அணியா என பாஜக தனது வளர்ப்பு நாயை முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

3. இனி தமிழக அரசியலில், தமிழிசை, கமல், ரஜினி, டிடிவி என அன்றாடம் ஒரு பிரேக்கிங் நியூஸ் விட்டையும், விநாடிக்கொரு மீம்ஸ் முட்டையும் வரப்போவதால் தியேட்டர்களில் கூட்டம் இருக்காது.

4. அரசியல் ஈவண்ட் மேனேஜ் மெண்ட் கம்பெனிகளுக்கு நன்றாக கல்லா கட்டும்.

5. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கட்சி நடத்துவதை அனுமதிக்கும் தமிழக மக்களது பரந்த மனதின் மற்றுமொரு சாதனை.

(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்.)

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க