Saturday, April 19, 2025
முகப்புகளச்செய்திகள்போராட்டத்தில் நாங்கள்வேலூர் - கோத்தகிரியில் மே தின நிகழ்வுகள் !

வேலூர் – கோத்தகிரியில் மே தின நிகழ்வுகள் !

வேலூர் – கோத்தகிரியில் மே தின நிகழ்வுகள் ! மே 1 தொழிலாளர் தினத்தன்று வேலூர், கோத்தகிரி நகரங்களில் புஜதொமு சார்பில் மே தின நிகழ்வுகள், கொடியேற்றங்கள், கூட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன. செய்தி - படங்கள்!

-

மே 1 தொழிலாளர் தினமன்று புஜதொமு சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

வேலூர்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான “வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம்” சார்பில் அண்ணா கலையரங்கம், மீன் மார்கெட் மற்றும் அடுக்கம்பாறை ஆகிய கிளைகளில் மே நாளையொட்டி 01.05.2018 அன்று காலை 10.00 மணியளவில் சங்கக் கொடியேற்றப்பட்டது.

அண்ணா கலையரங்கம் மற்றும் மீன் மார்கெட் கிளைகளில் தோழர் சுப்ரமணி தலைமையேற்க தோழர் சத்யா சங்கக் கொடியை ஏற்றினார். இவ்விரு கிளைகளிலும் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் அகிலன் சிறப்புரையாற்றினார்.

அடுக்கம்பாறை கிளையில் தோழர் முருகன் தலைமையேற்று சங்கக் கொடியை ஏற்றினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர் சிறப்புரையாற்றினார்.

பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்!

“கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு!” என்ற முழக்கத்தின்கீழ் வேலூர் மாநகரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் மேநாள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் 01.05.2018 அன்று நடைபெற்றது.

மக்கள் கலை இலக்கியக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் அவர்கள் வேலூர் அண்ணா சாலை பெரியார் சிலை அருகிலிருந்து மாலை 5.00 மணிக்கு பேரணியை தொடங்கி வைத்தார். வேலூர் மாநகரின் லாங்கு பஜார் உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக நடைபெற்ற மேநாள் பேரணி பழைய பேருந்து நிலையம் அருகில் மண்டி வீதியில் முடிவடைந்தது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் மேநாள் குறித்தும் மக்கள் விரோத மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தியும் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சரவணன் நன்றி கூறினார். பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர்.

*****

கோத்தகிரியில்…

கோத்தகிரி நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் 01 .05.2018 காலை 10 மணிக்கு செங்கொடி ஏற்றப்பட்டு மே தின தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் தோழர் பாலன் தலைமை ஏற்று முழக்கமிட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அவரை தொடர்ந்து மாவட்ட பொருளாளர் தோழர் விஜயன் கொடியேற்றி உரையாற்றினார். அவரது உரையில் “மேதினத்தில் சிக்காகோ தொழிலாளர்களின் இன்னுயிர் ஈந்து பெறப்பட்ட உரிமைகள் இன்று நம்மிடம் இல்லை. இல்லாத உரிமைகளை மீண்டும் பெறும்வரை மே தினம் கொண்டாட்ட நாளல்ல போராட்ட நாள்” என்றார்.

இறுதியாக மக்கள் அதிகார மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் உரையாற்றய போது, “தொழிலாலாளர்களுக்கு மட்டு்மல்ல அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளும் இன்று பறிக்கப்ப்பட்டுள்ளன, இது கட்டமைப்பு நெருக்கடியின் விளைவு எனவே உரிமைகளை பெற அனைத்து தரப்பு மக்களும் ஜல்லிக்கட்டு -மெரினா போராட்டத்தை போல வீதிகளில் இறங்கி போராடி முதலாளித்துவத்தை வீழ்த்த வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் வாகனப் பிரிவு தோழர்கள் சுப்பிரமணி, பாபு, கண்ணன், துரை, மணி, ரஜினி உட்பட 40 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் :
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்
(இணைப்பு-பு.ஜ..தொ.மு)கோத்தகிரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க