தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் செலுத்தும்வண்ணமும் வருகிற 20.06.2018 அன்று மாலை 4 மணியளவில் தருமபுரி நகரில் இரங்கல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதையொட்டி, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் 18.06.2018 அன்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே மோப்பம் பிடித்து வந்த போலீசு, பிரச்சாரத்திற்கு அனுமதி கிடையாது என்று கூறி வலுக்கட்டாயமாக தோழர்கள் 7 பேரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.
பிரச்சாரம் என்பது இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை. தற்போது போலீசைக் கொண்டு கருத்துரிமை பறிப்பில் ஈடுபட்டுள்ளது அடிமை எடப்பாடியின் அரசு. ஜனநாயக ஆட்சி என்பது இங்கு இல்லை. சர்வாதிகார ஆட்சியே இங்கு நடக்கிறது. இதற்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது.
தகவல் :
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
தொடர்புக்கு: 8148573417