எதையும் தாங்கும் இதயம் ஓ.பி.எஸ் – கருத்துக் கணிப்பு !

அடுத்த தேர்தலில் பா.ஜ.க, ரஜினி, அ.தி.மு.க என கூட்டணி பேரம் வைத்து சீட்டுக்களை கைப்பற்றுவதற்கு அ.தி.மு.க-விற்கு அளிக்கும் மோடி அரசின் ட்ரில்தான் இந்த எதையும் தாங்கும் இதயம் - இன்றைய கருத்துக் கணிப்பு

முதலில் பிளாஷ் ஃபேக்:   தமிழக துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மதுரை மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு வர உதவினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இராணுவத்தின் ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பியதுதான் அவர் செய்த உதவி. ஒக்கிப் புயலுக்கு வராத இராணுவம் இங்கே ஓ.பி.எஸ் குடும்பத்திற்கு ஓடி வருகிறது.

பிறகு தமிழகத்தில் எடப்பாடி பினாமிகள் இடத்தில் வருமானவரித்துறை சோதனை. தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.கவை ஒரு கலக்கு கலக்கி குலுக்கி கக்கத்தில் வைக்க நினைக்கும் பா.ஜ.கவின் இத்தகைய மிரட்டல்கள் ஓ.பி.எஸ் முதல்வராக இருக்கும் போதே துவங்கி விட்டன. ஒவ்வொரு சோதனைக்குப் பிறகும் அந்த செய்திகள் காணாமல் போகும். பணம், தங்கம் இதர பரபரப்புகள் புதைக்கப்படும். விசாரணையும் இருந்த இடம் தெரியாமல் போகும்.

அ.தி.மு.க கும்பலோ மத்தியிலே சரணாகதி, மாநிலத்தில் கமிஷனே கதி என்று படுவேகமாக இயங்கி வருகிறது. துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு மூலம் வந்த ஆணைக்கிணங்க பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக பாராளுமன்ற அணி பா.ஜ.கவிற்கு ஆதரவாக ஓட்டுப் போட்டது. அதில் நாலு ஓட்டு வரவில்லை என காவிகள் உளவுப்படையை முடுக்கி விட்டிருக்கிறார்களாம்.

இந்நிலையில் ஓ.பி.எஸ் அவர்கள், மைத்ரேயன் துணையோடு டெல்லி செல்கிறார். அங்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமனை பார்க்கப் போவதாக தெரிவித்திருந்தார். இதற்காக மைத்ரேயன் மூலம் சந்திப்பிற்கு ஒழுங்கு செய்யப்பட்டதாம். எதற்காக இந்த சந்திப்பு? இதற்கு நேற்று (24.07.2018) காலை வண்டலூர் சென்ற முதல்வர் எடப்பாடி பதிலளிக்கிறார். அங்கு பிறந்த ஒரு புலிக்குட்டிக்கு ஜெயா என்று பெயர் சூட்டியவர், பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஓ.பி.எஸ் டெல்லி சந்திப்பு தனிப்பட்ட முறையிலானது, நிர்மலா சீதாராமன் அனுப்பிய விமான சேவைக்கு நன்றி கூறும் பொருட்டு நடக்கிறது என்று போட்டு உடைத்தார்.

வேறு வழியின்றி தில்லியிலும் இதையே ஓ.பி.எஸ் கூறியிருக்கிறார். நிர்மலா சீதாராமனை சந்திக்கப்போவதாக அவர் கூறியதை சந்தித்து விட்டார் என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டதாம். இதனால் கொதித்தெழுந்த நிர்மலா, தனது இராணுவ விமான உதவி செய்தி வெளியே வந்து, இப்படி சந்திக்காமலேயே சந்தித்துவிட்டதாக செய்தி போடுகிறார்களே என்று சீறினாராம்.

உடனே வெளியே அமர்ந்திருந்தவர்களில் மைத்ரேயனை மட்டும் உள்ளே அனுமதித்தவர், ஓ.பி.எஸ்-ஐ சந்திக்காமல் திருப்பி அனுப்பி விட்டாராம். அதையே டிவிட்டரிலும் போட்டு மானத்தை வாங்கியிருக்கிறார்.  ஓபிஎஸ் அவரைச் சந்திக்கப் போனது அ.தி.மு.க அரசு குறித்த வருமான வரி சோதனைகள், அடுத்த தேர்தலுக்கான கூட்டணி பேரங்கள் மற்றும் இதர மிரட்டல்கள் – சரணாகதிகள், திரை மறைவுப் பேரங்களுக்கு என்பது ஊரறியும். ஜெயா உயிரோடு இருந்த போது இதே மாதிரி பல மத்திய தலைவர்களை சந்திக்காமல் அவமதித்திருக்கிறார். அதனால்தான் போயஸ் தோட்டம் என்றாலே பல தலைவர்களுக்கு அலர்ஜி. எப்படி இருந்தாலும் இந்த மாதிரி அவமானங்கள் எல்லாம் அதிமுகவில் சகஜம்.

தில்லி சென்று வெறுங்கையோடு சென்னை திரும்பிய ஓ.பி.எஸ், நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லையே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும என்று அண்ணா கூறியதாக கூறி தனது தோல் தடிப்பு என்று சென்று விட்டார்.

மாலை டி.வி விவாதத்தில் பங்கேற்ற சில அப்பாவிகள் ஓ.பி.எஸ் எனும் 7.5 கோடி தமிழக மக்களின் துணை முதல்வரை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமதித்து விட்டார் என கண்ணீர் வடித்தனர்.

அய்யா, டயரைத் தொழுதவர்கள், ஹெலிகாப்டர்களை பறக்கும் போதே மண்ணைத் தொட்டு வணங்கியவர்கள், ஜெயா கோட்டைக்கு வரும் போதும், செல்லும் போதும் கும்பல் கும்பலாக தொழுசாசனம் செய்தவர்கள் எல்லாம் இந்த மான அவமானங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பது அவர்களது ஆன்மாவிற்கே தெரியும். ஆனால மைத்ரேயன் போன்ற மயிலாப்பூர் வாசிகளுக்கு மட்டும் இன்னும் முதல் மரியாதை இருக்கிறது என்பதையும் சிலர் புகார் சொல்கின்றனர்.

பா.ஜ.கவோ இந்த அடிமை எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறானே என்று கருணை காட்டுவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடித்து துவைக்கிறார்கள். அடுத்த தேர்தலில் பா.ஜ.க, ரஜினி, அ.தி.மு.க என கூட்டணி பேரம் வைத்து சீட்டுக்களை கைப்பற்றுவதற்கு அ.தி.மு.க-விற்கு அளிக்கும் மோடி அரசின் ட்ரில்தான் இந்த எதையும் தாங்கும் இதயம் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

மூன்று பதில்களைத் தெரிவு செய்யலாம்!

இன்றைய கேள்வி:

ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்காமல் நிர்மலா சீதாராமன் அவமதித்ததன் விளைவு என்ன?
ஒரு மாலைநேர வெட்டி விவாதம்
ரெய்டு பயத்தினால் நடுங்கும் அ.தி.மு.க-விற்கு அடுத்த அடி
தேர்தல் கூட்டணிக்காக பா.ஜ.க மிரட்டுவதன் ஆரம்பம்
தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானம்
எடப்பாடியின் சதியால் அடிவாங்கிய ஓ.பி.எஸ்
பார்ப்பனர்களுக்குத்தான் தில்லியில் மரியாதை

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

டிவிட்டரில் வாக்களிக்க:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க