ஐ.நா.-வின் பொதுச் செயலர் ஆன்டானியோ ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மனிதநல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் – செயற்பாட்டாளர்கள் கொல்லப்படுவது, கைது செய்யப்படுவது, பழிவாங்கப்படுவது ஆகிய குற்றங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைக் கமிஷனில் உறுப்பினர்களாக உள்ள 38 நாடுகளில் மேற்கண்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் நடப்பதாக அறிக்கை கூறுகிறது. இந்த நாடுகளில் உள்ள சட்டம், நீதி அமைப்பு, அரசியல், அரசு நிர்வாகம் ஆகியவை சமூக ஆர்வலர்களை பழிவாங்குவதற்கு தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகவும் அறிக்கை கூறகிறது.
இத்தகைய மனித உரிமை மீறல் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா போக, அல்ஜீரியா, பக்ரைன், சீனா, எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், மெக்சிகோ, மொராகோ, மியான்மர், பாகிஸ்தான், ருவண்டா, சவுதி அரேபியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பகிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகள் உள்ளன.
குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் அரசு மற்றும் அமைப்புகளின் ஊழல்களை தட்டிக்கேட்கும் சமூக ஆர்வலர்கள் பழிவாங்கப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க முதலான வல்லரசு நாடுகளின் கையில் இருக்கும் ஐ.நா.வின் பாரபட்சமான போக்கிற்கு சான்றாக இப்பட்டியலில் மேலை நாடுகள் இல்லை. எனினும் இந்த விமர்சனத்தை இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வைப்பது போன்று வலது சாரி வெறியர்கள் கூற முடியாது. ஏனெனில் பட்டியலில் இருக்கும் இந்தியா, சவுதி அரேபியா, ஜப்பான், பாகிஸ்தான் போன்றவை தீவிரமான அமெரிக்க அரசு ஆதரவு நாடுகள். அதிலும் இந்தியாவெல்லாம் தன்னை முற்று முழுதாக அமெரிக்க சேவைக்கு ஒப்படைத்துக் கொண்ட நாடு.
சீனா, வெனிசுலா போன்ற நாடுகள் கூட அமெரிக்காவின் அரசியலுக்கு ஏற்ப எதிர்க்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் அடியாளாக இருக்கும் இந்தியா ஏன் இப்பட்டியலில் இடம்பெறுகிறது?
- பசுவின் பெயரால் படுகொலை செய்வது நாங்கள் தான் – பாஜக எம்.எல்.ஏ. ஒப்புதல் !
- கௌரி லங்கேஷ் படுகொலையைக் கொண்டாடுபவர்கள் யார் ?
- கோமாளித்தனம் + கொலைகாரத்துவம் = மோடித்துவம்
ஏனென்றால் மோடி ஆட்சி ஏற்ற பிறகு இந்துமதவெறியர்கள் தங்களுக்கு பிடிக்காத சமூக ஆர்வலர்களைக் கொல்வது, கைது செய்வது மிகவும் அதிகரித்திருக்கிறது. கடைசியில் அறிவுத்துறையினரைக் கூட கைது செய்யும் போது அது உலக அளவில் கல்வி – அறிவுத் துறையினர் மூலம் பெரிதும் பேசப்படும் செய்தியாகிறது.
ஆகவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் அமெரிக்காவின் அடிமைகளாக இருக்கும் பா.ஜ.க.-வினர், ஐ.நா. கூறியிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.
மக்களுக்காக பாடுபடும் சமூக ஆர்வலர்களை வதைக்கும் இந்திய அரசை ஐ.நா. அம்பலப்படுத்தியதற்கு இவர்களிடம் பதிலேதும் இல்லை!
கேள்வி:
இந்தியாவில் சமூக ஆர்வலர்கள் பழிவாங்கப்படுவதாக ஐ.நா. அறிக்கை கூறியிருப்பதற்கு என்ன காரணம்?
- அதிகமாகும் ஒடுக்குமுறை
- ’கிறித்தவ நாடு’களின் சதி
ட்விட்டரில் வாக்களிக்க:
டிவிட்டர் Poll: இந்தியாவில் சமூக ஆர்வலர்கள் பழிவாங்கப்படுவதாக ஐ.நா. அறிக்கை கூறுவதற்கு என்ன காரணம்?
ஐ.நா-வின் பொதுச்செயலர் ஆன்டானியோ ஐ.நா. சபையின் 9வது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் சமூக ஆர்வலர்கள் மீதான ஒடுக்குமுறை இந்தியாவில் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.— வினவு (@vinavu) September 14, 2018
யூடியூபில் வாக்களிக்க:
https://www.youtube.com/user/vinavu/community
ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:
- வினவு செய்திப் பிரிவு