ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பு பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின் சார்பாக, தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர் சென்னையில் இன்று (27-09-2018) காலை 11 மணியளவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகின்றனர்.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அனுமதி கொடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சமீபத்தில் ஆய்வுக்குழு ஒன்றை அமர்த்தியது. அக்குழு தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு நடத்தியது. அங்கு ஆய்வுக்குழுவினரிடம் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை  மூட வேண்டும் என மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர் சென்னையில் இன்று காலை 11 மணியளவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகின்றனர்.

இடம் : சென்னை பிரஸ் கிளப்

நாள் : 27-09-2018 நேரம் : காலை 11.00 மணி

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு, வினவு தளம், “வினவின் பக்கம்” முகநூல் பக்கத்திலும், வினவு யூ-டியூப் சேனலிலும் நேரலையில் ஒளிபரப்பப்படும்.

இணைந்திருங்கள் !

இணைந்திருங்கள் !