ல்லா வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் தடையில்லை என உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை கேரள அரசு ஏற்றுக்கொண்டது; தேவசம் போர்டும் ஏற்றுக்கொண்டது; ஜனநாயக சக்திகளும் பல்வேறு கட்சிகளும் இதை ஏற்றுக் கொண்டுள்ளது. அதே நேரம் தற்போது கேரளாவில் இதை ஏற்ககூடாது என்று ஒரு கருத்தை உருவாக்கி வருகின்றனர். அதில் பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர் மற்றும் இந்துத்துவா இயக்கங்கள் தீவிரமாக இருக்கின்றனர்.

தமிழகத்திலும் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, பி.ஜே.பி. கட்சியினர்கள் இந்தத் தீர்ப்பு தவறு என கூறுகின்றனர். ‘பெண்கள் தீட்டு’ என்ற கருத்தும் கோவிலுக்கு வந்தால் புனிதம் கெட்டுவிடும் என்பதும் தீண்டாமைவாதிகளான இந்துமதவெறியர்கள் பக்தர்கள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு பக்தியை வன்முறைக்களமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்த சதியை கண்டித்து ம.க.இ.க வினர் சென்னை முழுவதும் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

படிக்க:
சபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை !
உச்சநீதி மன்றம் தீர்ப்பு : சபரிமலை அய்யப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !

தகவல்: ம.க.இ.க., சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க