சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, துருக்கி இஸ்தான்புல் நகரத்திலுள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
சவுதி அரச குடும்பத்தின் அளவற்ற அதிகாரம் குறித்து தொடர்ந்து எழுதி வந்ததன் காரணமாக ஆத்திரமுற்ற இளவரசர் முகமது பின் சல்மானின் ஏற்பாட்டிலேதான் ஜமால் கசோகியின் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் தனது பாஸ்போர்டை புதுப்பிக்கும் பொருட்டு அக்டோபர் 2-ஆம் தேதி சென்றார் ஜமால் கசோகி. உள்ளே போனவர் திரும்பி வரவில்லை. தூதரகத்திலே வைத்து சவுதி உளவுப் போலீசாரால் கொடூர சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சி.சி.டி.வி. காட்சிகள், தூதரக அதிகாரிகளுக்கும் சவுதி உளவுப் போலீசாருக்குமிடையே நடைபெற்ற உரையாடல் பதிவுகளை துருக்கி அரசும் ஊடகவியலாளர்களும் அம்பலப்படுத்திய பிறகே இவ்வுண்மை தெரிய வந்திருக்கிறது. வேறுவழியின்றி தற்போது உளவு போலீசு அதிகாரிகளை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது, சவுதி அரசு.
ஜமால் கசோகியின் கொடூர கொலை சதிக்குப் பின் பொதிந்துள்ள பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்துகின்றன இக்கேலிச்சித்திரங்கள்.
“இங்கு ஜமால் கஷோகி இல்லை.”

உண்மைகளை எழுதினால் கிடைக்கும் பலன்

அமெரிக்க வாளால் துண்டு துண்டாக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம்

வெறியாட்டம் போடும் கூட்டணி

இரத்தக் கரையை பணத்தால் மறைக்கும் சவுதி இளவரசன்

கஷோகியை கொன்ற நீதி இதுதான்.

கொலைகாரனே கொலையை விசாரிக்கும் அவலம் சவுதியில்…

கொல்லப்பட்ட பிறகும் அதிகாரத்தின் கழுத்தை நெறிக்கும் ஜமால் கஷோகி.

என் தகப்பா .. நீதான்யா இந்த உலகத்துலயே நான் அப்பாவிங்கிறது ஒத்துக்கிட்ட ஒரே ஆளு !

ட்ரம்ப் சவுதி இளவரசனிடம் பணியவில்லை.

படிக்க:
♦ மெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் !
♦ உண்மையைப் பேசாதே ! பத்திரிகையாளர் மீது தொடரும் மோடி அரசு ஒடுக்குமுறை !
நன்றி: cartoonmovement.com