உலகைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம் என்று காரல் மார்க்ஸ் சொன்ன கம்யூனிச பூதம் இன்றும் முதலாளித்துவத்தை அச்சுறுத்தி வருகிறது.
மூலதனம் நூல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் கடந்த பிறகும், ரசிய சோசலிசப் புரட்சி நடத்தப்பட்டு 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவற்றைப் பார்த்து ஜன்னி கண்டவர்களைப் போல் அரற்றுகிறார்கள் முதலாளித்துவவாதிகள்.
மூலதனம் வெறும் புத்தகம் அல்ல முதலாளித்துவத்தின் சாவை முன்னறிந்துகூறிய அசரீரி. எனவே தான் மூலதனதை மீண்டும் படிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என தங்கள் வாயாலே ஒத்துக் கொள்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள்.
பெருகிவரும் நெருக்கடிகள் மீண்டும் ஒரு சோசலிசப் புரட்சியை கோருகின்றன. அதனால் தான் மாஸ்கோவின் குளிர்கால அரண்மனையின் முற்றுகையை நினைவூட்டும் வண்ணம் மக்களின் பேரெழுச்சி போராட்டங்கள் வால் வீதி முதல் மெரினா வரை நீள்கின்றன.
“இனியும் இந்த சமூக அமைப்பை சகித்துக் கொள்ள முடியாது” என்ற முழக்கத்தின் எதிரொலிப்புதான் ஸ்டெர்லைட் வரை நீள்கிறது. “இதோ உனது முடிவு நெருங்குகிறது” என முழங்குகிறது மக்களின் குரல். துப்பாக்கிகளின் வேட்டு சத்தங்களைத் தாண்டி புரட்சியின் ஓசை கேட்கத் தொடங்குகிறது கேளுங்கள் அதை…
காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் 150வது ஆண்டையொட்டி வினவு தளத்தில் வெளியான “மார்க்ஸ் எனும் அரக்கன்” எனும் காணொளி.
*****
“புரட்சியின் தருணங்கள் !” காணொளி இது உங்களை ரசியப் புரட்சியின் போராட்ட களத்துக்குள்ளாகவே அழைத்து செல்லும்…
இது ரசிய சோசலிசப் புரட்சியின் 100வது ஆண்டையொட்டி வினவு தளத்தில் வெளியிட்டப்பட்டது.
*****
ரசிய சோசலிசப் புரட்சியின் 100வது ஆண்டையொட்டி வினவு தளத்தில் வெளியிடபட்ட “தோழர் லெனின் சாதனைகள்” எனும் காணொளி…
*****
மெரினா எழுச்சியின் போது தோழர் கோவன் பாடிய “புதிய உலகம் உன் கண்ணில் படவில்லையா” – பாடலின் காணொளி…
*****
“தன்னை முதன்முதலாக மனிதனாக உணர்கிறேன்” எனக் கூறி சோவியத்தின் சமத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொன்ன பால்ராப்சன் பாடிய “சோவியத் கீதம்” உங்களுக்காக.
*****
ரசிய சோசலிசப் புரட்சியின் 100வது ஆண்டையொட்டி வினவு தளத்தில் வெளியிடபட்ட “நவம்பர் புரட்சி நூற்றாண்டு” காணொளி…
தொகுப்பு :
