விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – பாகம் 4
தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க
திரும்ப ஒரு கேள்வி கேட்கலாம். வேலை வாய்ப்புகள் எல்லா இடத்துலயும் வரணும்னா ஸ்டெர்லைட் கம்பெனி வைக்கணும், சேலம் 8 வழி சாலை வரணும், ஜிண்டால் ஃபாக்டரி வரனும், அதானி வரணும் என்று சொல்லலாம். ஆனால், ஸ்டெர்லைட்டும், ஜிண்டாலும், அதானியும் முதலீடு செய்து அவர்கள்தான் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்களே தவிர, படித்த இளைஞர்களுக்கு கௌரவமான வேலை கிடைப்பது அரிதாகி வருகிறது. எனவே, வேறு ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் உழைக்கும் மக்களே. அதற்கு மேல் இங்கு முதலாளி என்ற ஒரு வர்க்கம் உண்டு. அந்த வர்க்கம் சிறுபான்மை வர்க்கம். பெரும்பான்மை வர்க்கம் தொழிலாளிதான்.
ஆனால் தொழிலாளி வர்க்கம் ஆங்காங்கே பிரிந்துள்ளனர். Blue Collar, white Collar என்று பொருளாதார அடிப்படையில், வாழ்வின் அடிப்படையில், பின்புலன் அடிப்படையில் தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள்.
அடிப்படையில் நாம் தொழிலாளிகள். தொழிலாளிகள் நீண்ட நெடு போராட்டங்கள் மூலம் வென்றெடுத்த சட்ட, திட்டங்கள் உண்டு. இந்த சட்ட திட்டங்களை எப்படி அணுகுவது, என்ன கேட்க வேண்டும், நமது உரிமை என்ன என்பது பற்றிய அறிவு இல்லாததை ஒரு பெரிய குறைபாடாகக் கருதுகிறேன்.
படிக்க :
♦ அமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்
♦ தங்கத்தில் உருளும் இந்திய மகாராஜாக்களின் திருமணங்கள் ! ஆவணப்படம்
10வது – 12வது பாட புத்தகங்களில் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி ஒரு பாடமாக கொண்டு வர வேண்டும். கொண்டு வரும் பட்சத்தில் அதைப் படித்த இளைஞர்கள் தமது உரிமைகளை புரிந்து கொண்டு சுயமாக யோசித்து செயல்படுவார்கள். சுய யோசனையும் சுய அறிவும் விழிப்புணர்வும் இல்லாதது தான் வெளிநாடு போய் ஏமாறுவது போன்ற தவறுகளுக்கு காரணம்.
வெளிநாடு வேலை மோசடியை தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
மலேசியா சிங்கப்பூர் இது மாதிரியான நாட்டுக்கு போய் நிறைய பேர் பாதிக்கப்படுறாங்கன்ற போது அந்த விசா மையத்திலேயோ, இல்லை ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலையோ இது மாதிரி பாதிக்கப்படுறவங்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி முகாம் மாதம் ஒரு முறை நடத்தலாம்.
பஸ் நிலையத்தில், ரயில் நிலையத்தில் “தேவை (WANTED), பிக் பாக்கெட்டுகள் ஜாக்கிரதை” அப்பிடின்னு ஃபோட்டோ ஒட்டி போடுவாங்க. இது மாதிரி போலி ஏஜெண்டுகள் முகங்களை எல்லாம் ஏன் ஒவ்வொரு பாஸ்போர்ட் ஆபிசுலயும் “இவங்க எல்லாம் போலி ஏஜெண்டுகள், இந்த போலி ஏஜெண்டுகளை நம்பி ஏமாற வேண்டாம் அப்பிடீன்னு அவங்க ஃபோட்டோவோட போட்டு ஒட்டுனீங்கன்னா போலி ஏஜெண்டுகளை நம்பாம இருப்பாங்க இல்லையா.” ஏன் இதை பண்ண மாட்றாங்க.
இது செய்யாம இருக்கிறதுக்கு காரணம் அந்த போலி ஏஜெண்டுகள் அரசியல் பின்னணி உள்ள நபர்களாக இருக்காங்கன்றது காரணமா இல்ல வேற ஏதும் காரணமா?
ஒரு பிக் பாக்கெட்டு 100, 50 எல்லாம் திருடுறதுக்கு அவங்க ஃபோட்டோ எல்லாம் போட்டு அவங்களை பகிரங்கப்படுத்தி, மானத்தை வாங்கி அவங்க குற்றம் செஞ்சாங்கன்னு சொல்றீங்க. ஆனா, இதே போல குற்றம் இழைக்கும் வெளிநாட்டு ஏஜென்டுகளை ஏன் துரத்துவதில்லை. 1 லட்சம் 5 லட்சம் 10 லட்சம் அப்டின்னு ஒரு பெரிய தொகை வர்றதுனால இந்த தொகையோட கமிசன் போலீசுல இருந்து அரசாங்கத்துல இருக்கிற எல்லாத்துக்கும் போறதால இதை கண்டுக்காம இருக்காங்கன்னு எனக்கு தோணுது.
ஏன் வெளிநாடு போகணும்?
இந்தக் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கிட்டு தான் இருக்கு. இந்த குற்றங்கள் நடக்கிறதுனால தான் அங்க போறவங்களுக்கு பாதுகாப்பு இல்லை. போறவங்க தப்புதான் செய்றாங்க. ஆசைப்பட்டு தான் போறாங்க. “எனக்கு அங்க போனா வேலை கிடைச்சிடும். ஒரு சின்ன தப்பு தான் டிராவல் விசால தான் போறேன். அங்க போய் வேலை வாங்கிப்பேன்’னு அவங்க போறதுக்கு காரணம் நெருக்கடி. பொருளாதார நெருக்கடி.
படிக்க :
♦ ஜார்கண்ட் : தொடரும் இந்திய அரசின் பட்டினிப் படுகொலைகள் !
♦ தொழிலாளர் சட்டத்தை ஒழி – தொழில் வளரும் ! மோடினாமிக்ஸ் !
அவர்கள் ஏன் வெளிநாட்டு வேலைக்கு சட்டத்தை மீறி போகிறார்கள் என்று சிலர் கேட்கலாம். இது கை கால்களை ஒடித்த பின்பு, ஏன் தவழ்ந்து போறாங்க என்று கேள்வி கேட்பது போன்று உள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி போன்ற குற்றங்களுக்கு மூல காரணமாக அரசின் திட்டங்கள்தான் இருக்கு. அரசு கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்காக, விவசாயத்தையும், தொழிலாளிகளையும், சிறு முதலாளிகளையும் ஒடுக்குவது தான் இது போன்ற குற்றங்களுக்கு மூல காரணமாக உள்ளது. வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகளும் சிறு உடைமையாளர்களும் இது போன்று வாய்ப்புகளை நோக்கிச் சென்று விட்டில் பூச்சி ஆகின்றனர்.
“எனக்கு வேற வழி இல்லை. நான் diploma படிச்சிருக்கேன் Engineering படிச்சிருக்கேன், வேலை கிடைக்கல. எனக்கு மாத வருமானம் வேண்டும். எங்க அப்பா விவசாயம் பன்னிட்டிருந்தாரு அதையும் நிறுத்தி விட்டீங்க. எனக்கு கவர்மென்ட் குடுத்த இழப்பீட்டு பணத்திலதான் படிச்சு முடிச்சிருக்கேன். நான் குடும்பத்துக்கு திரும்ப சம்பாதிக்கணும். மாசம் 5 ஆயிரம், 6 ஆயிரமாவது குடுக்கணும். இங்க நான் பிளம்பிங் வேலை இது மாதிரி வேலை தான் பார்த்திட்டிருக்கேன். இங்கயும் வருமானம் இல்ல. இந்தியா முழுவதிலும் இருந்து குறைந்த கூலிக்கு உழைக்க நிறைய பேரை கொண்டு வருகிறார்கள். அவங்களுக்கும் விவசாயம் அழிவினால் வேலை இல்லாமல் இப்படி வருகிறார்கள். கிடைக்கிற வேலை வாய்ப்புக்கும் கடும் போட்டி உள்ளது. நான் வேலைக்கு எங்க போவேன்.”
உள்ளூரில் கிடைக்கும் சொற்ப வேலை வாய்ப்புகளிலும் ஒருதரப்பட்ட படிச்சு வர்ர மக்களுக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு கொடுக்கணும்ன்ற unethical rule, unwritten rule follow பண்ணப்படுது. அதில் ஊழல், சிபாரிசு என்று பல முறைகளில் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. கிராமங்கள்ல படிச்சவங்க, மக்களுக்கு வேலை கொடுக்கணும்ன்னு ஒரு ஒதுக்கீடு கிடையாது. ‘திறமை’ அடிப்படையில் என்று சோதித்து கொடுக்கப்படுகிறது. ‘திறமை’ ஒரு மேட்டர்ன்னா அதற்கான பயிற்சி எல்லோருக்கும் சமமாக கிடைக்கிறதா?
– சரவணன்
(தொடரும்)
நன்றி : new-democrats
இதன் முந்தய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :
1. வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?
2. வாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா !
3. என்.ஜி.ஓ முட்டுச் சந்து : பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் போலீசு !