திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, கருவாக்குறிச்சி கிராமம் கஜா புயலால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. பல்வேறு வீடுகள் சேதமடந்துள்ளது. தென்னந்தோப்புகள் கடுமையான பாதிப்படைந்துள்ளன. மரங்களை அப்புறப்படுத்த முடியாமல், வீடுகளை சரிசெய்ய முடியாமல் தவிக்கின்றனர் மக்கள். புயலுக்குப் பின் அமைதி இன்னும் திரும்பவில்லை! அரசின் நிவாரணப்பணி எட்டாத மற்றுமொரு கிராமமிது.
இந்த கிராமத்தில் மரம் விழுந்ததில் அடிபட்டு இறந்துபோனான் சிறுவன் கணேசன். “என்னோட குல சாமி உயிரு என் கையிலேயே போயிருச்சு” என்று கதறுகிறார் சிறுவனின் தாய்.




படிக்க:
♦ புயல் எவ்வாறு தோன்றுகிறது ? காணொளி
♦ அரசால் வஞ்சிக்கப்படும் காவிரி டெல்டா மக்களுக்கு தோள் கொடுப்போம் !

***
வாய்க்கா தண்ணிய வடிகட்டி குடிச்சிட்டிருக்கோம்
”சொந்த செலவில் 25,000 செலவு பண்ணி ரோட்டை சரி செஞ்சிருக்கோம். குடிக்க தண்ணியில்ல. வாய்க்கா தண்ணிய வடிகட்டி குடிச்சிட்டிருக்கோம். போர் தண்ணி ஒரு டேங்க் – ஆவது ரொம்பட்டுமேனு மணிக்கு ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஜெனரேட்டர் வாடகைக்கு வாங்கியாந்திருக்கோம். நாலு நாலுக்கு அப்புறம் இப்பத்தான் இ.பி. காரங்களே பத்து பேரு வந்துருக்காங்க. அதிகாரிங்க இதுவரைக்கும் யாரும் எங்கள வந்து பாக்கவுமில்லை. என்ன ஏதுனு கேக்கவுமில்லை.”
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, மூவர் கோட்டை கிராமத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்புகளையும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் விவரிக்கிறார், அக்கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்.
படங்கள், காணொளி: