காத்திருப்பு எனும் கருவில் வாசகர்கள் அனுப்பிய புகைப்படங்கள் இவை. நண்பர்களுக்கு நன்றி!

கவலைகளுக்கு பஞ்சமில்லாத நாட்டில் கலங்கி என்ன பயன்?
மனநல ஆலோசனை மையம், சென்னை சைதாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம்.

வங்கி நிறைய பணம், மனம் நிறைய வெறுமை!
சென்னை, சைதாப்பேட்டை மார்க்கெட் அருகே உள்ள வங்கி.

பலருக்கும் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை இங்கு ஒடிந்து போயிருக்கிறது.
சென்னை, சைதாப்பேட்டை இரயில் நிலையம்.

திவசத்தின் தட்சணைக்காக காத்திருக்கும் வாழ்க்கை!
சென்னை, சைதாப்பேட்டை தேரடித்தெரு காரணீஸ்வரர் கோயில்.

கடலில் குளிக்கப் போன அப்பாவின் பொருட்களை பொறுப்பாக பாதுகாக்கும் காவலாளி!
பாண்டிச்சேரி ஆரோவில் கடற்கரை.

கடைவிரித்தேன் கொள்வாரில்லை!
சென்னை – மாதவரம் சாலை.

மேயச்சென்ற ஆடுகள் திரும்பி வரும், பயமில்லை!
ஏலகிரி மலை, முதலைத்தளவு சிற்றருவியில் விவசாயி.

நேரம் இருட்டிவிட்டது, வீடு அழைக்கிறது!
சென்னை, கிண்டி பேருந்து நிறுத்தம்.

ஓடிக் களைக்காத ரயிலும், ஓடிக் களைப்பதற்காக காத்திருக்கும் பயணிகளும்!
சென்னை, குரோம்பேட்டை ரயில் நிலையம்.

இன்றைக்காவது காலியாக பேருந்து வருமா?
சென்னை, குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம்.

காய்ந்து போன மாலையை கழட்டக் காத்திருக்கும் நேரு!
சென்னை, கிண்டி கத்திப்பாரா மேம்பாலம்

சூரியன் அஸ்மித்துப் போன பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து, அஞ்சலி செலுத்த இனி யார் வருவார்கள்?
சென்னை, நந்தம்பாக்கம்.

வியாழக்கிழமை போராட்டம் – வெள்ளிக்கிழமையோ ஜெபம்! படிக்க காத்திருக்கும் சுவரொட்டிகள்!
சென்னை, கிண்டி

ஊழலின் சிரிப்பு ஆளும் போது – அவலத்தின் இருப்பு காத்திருந்து என்ன பயன்?
சென்னை, கிண்டி.

காலையிலேயே காற்று வாங்க வருவார் யாருமில்லை!
சென்னை, பறங்கிமலை

உறையும் பனி எப்போதும் உருகும்?
கன்சாஸ் மாகாணம், அமெரிக்கா.

நீங்கள் வாங்கினால் என் சுமை குறையும் – காத்திருக்கிறேன்!
சென்னை கிண்டி போரூர் சாலை

மழை நிற்பதற்காக இங்கு யாரும் காத்திருக்க முடியாது!
குரோம்பேட்டை இரயில் நிலையம், சென்னை.

கஜா புயல்: நிவாரண பொருட்களுக்கு காத்திருக்கும் மக்கள்.
அதிராம்பட்டினம் – ஏரிப்புறக்கரை – மீனவ கிராமம்.

எங்களுக்குள் பேசுவதற்கு ஒன்றுமில்லை – உங்களிடம் பேச செல்பேசிகள் சார்ஜ் ஏற்றுகின்றன!
கஜா புயல்: அதிராம்பட்டினம்.

வீசியழித்த புயலில் எங்களிடம் மிஞ்சியவை!
கஜா புயல், முத்துப்பேட்டை- ஆலங்குடி