சென்னை சேப்பாக்கத்தில் தூத்துக்குடி மாணவர்கள் உண்ணா நிலை போராட்டம்!
தூத்துக்குடி மாணவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணா நிலை போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி 1 நிமிடம் கூட அவர்களை போராட்டக்களத்தில் நிற்க விடாமல் வந்த உடனேயே அவர்களை வலுக்கட்டாயமாகவும் அராஜகமாகவும் கைது செய்துள்ளனர் போலீசார்.
குடந்தை அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் !
இதனைத் தொடர்ந்து, குடந்தை அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கொடுத்த பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை கண்டிக்கிறோம்! ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, அரசானை வெளியிட வேண்டும்! தூத்துக்குடியில் நிலவும் போலிசின் அடக்குமுறையை கண்டிக்கிறோம்!
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடந்தை அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பாக கூடி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
என்ன நடக்கிறது, தூத்துக்குடியில்?
ஸ்டெர்லைட் சதியின் பின்னணி என்ன ? மக்கள் அதிகாரம் ராஜு