டெல்டா மாவட்டத்தில் கஜா புயலின் கடுமையான பாதிப்புகளில் இருந்து மக்கள் மீளவில்லை. அரசும் நிவாரணப் பணிகள் எதையுமே முறைப்படுத்தாமல், முறையாக நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.

இதனைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை பேரிடர் மண்டலமாக அறிவிக்க கோரியும் மக்கள் அதிகாரம் குடந்தை பகுதியின் சார்பில் கடந்த 18-12-2018 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசிடம் அனுமதி கோரப்பட்டது.

ஆனால் ஜனநாயக விரோத எடப்பாடி அரசின் போலீசு அதற்கு அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் மீன் மார்க்கெட் அருகில் மக்கள் அதிகாரம் சார்பில் கடந்த 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை கும்பகோணம் மேற்கு போலீசு கைது செய்தது.

மக்களின் அடிப்படை உரிமைக்காக ஜனநாயரீதியில் தமது கருத்தை தெரிவிக்கக் கூட அனுமதியற்ற நிலைதான் இந்தியா முழுவதும் நீடிக்கிறது.

ஜெயபாண்டியன்
மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் (கும்பகோணம் பகுதி)
+91 97892 61624

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க