தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொழிப்போர் தியாகிகளின் 54-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
*****
சிதம்பரம்
மொழி போர் தியாகிகளின் 54-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சிதம்பரம் அண்ணமலை பல்கலைக் கழகத்தி
இந்த நிகழ்வில் இந்தி – சமஸ்கிருதம் மொழியை திணித்து, பல்வேறு மொழி, இன கலாச்சாரத்தை அழித்து இந்து-இந்தி-இந்தியா எனும் அகண்ட பாரதத்தை திணிக்கும் மோடி அரசை கண்டித்தும், நாடு முழுவதும் பரவிவரும் பார்ப்பன பாசிசத்தை வேரறுக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சிதம்பரம்.
*****
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம், தொடர்புக்கு – 97888 08110.
*****
பென்னாகரம்
ஜனவரி-25 மொழிப்போர் தியாகிகள் தினம் !
“மொழி உரிமை, சமூகநீதி ஜனநாயகம் காக்க! பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த ஒன்றுப்படுவோம்!” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக 25.10.2019 அன்று பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தெருமுனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்த தெருமுனை கூட்டத்தில் தருமபுரி மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துகுமார் மொழி போர் தியாகிகளை நினைவு கூறினார்.
பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு மொழி காப்பது நமது கடமை என்பதை விளக்கினார். இறுதியாக பு.மா.இ.மு. தோழர் பாலன் நன்றியுரை ஆற்றினார்.
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தர்மபுரி.