சென்னை 42-வது புத்தகக் காட்சி பற்றியும் கீழைக்காற்று அரங்கிற்கு வருகை தந்திருந்த வாசகர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறார் தோழர் துரை. சண்முகம்.
‘’கீழைக்காற்று அரங்கிற்கு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், திரைத்துறையினர், தோழர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர். ஏதோ புத்தகம் வாங்குவதற்கான வருகையாக என்றில்லாமல், ஒரு புதிய அரசியல் கருத்து உரையாடலை நோக்கி வந்ததாகவே பார்க்கிறேன்.
வாசகர்களை வெறும் நுகர்வோராக மட்டும் கருத முடியாது. அவர்களுக்குத் தேவையான கருத்து நம்மிடம் இருக்கிறதா? என்பதை புத்தக வெளியீட்டாளர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதனை வணிகம் சார்ந்த நடவடிக்கையாக மட்டும் சுருக்கி புரிந்து கொள்ள முடியாது. இது கருத்துலகம். இன்றைய தலைமுறையினருக்கு என்ன மாதிரியான கருத்தும் சிந்தனையும் தேவைப்படுகிறது. அதனோடு தொடர்புடையவர்களாக புத்தக வெளியீட்டாளர்கள் இருக்கிறோமா? என்பதை பரிசீலித்து பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
மார்க்சிம் கார்க்கி சொல்வதைப்போல உலகத்திலேயே சிறந்த கருத்து மனிதன் என்பார். அவர்களது நடைமுறைக்கும் சிந்தனைக்கும் தேவைப்படும் தொடர்புடைய ஒரு கருத்தை தரக்கூடிய இடத்தில் நூல் வெளியீட்டாளர்கள் இருக்க வேண்டும்.
எண்ணற்ற இளைஞர்கள் வருகை தந்திருந்தார்கள். இளைஞர்களுக்குத் தேவைப்படுவோராக நாங்கள் இருந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. விழுப்புரம், விருத்தாசலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் குறிப்பாக முதல் பட்டதாரி மாணவர்கள் பலர் வந்திருந்தனர். நிறைய படிக்க வேண்டும் என்று விருப்பப்படுவர்களுக்கு பொருளாதாரம் இல்லை. புத்தக அலமாரியைப் பார்ப்பார்கள். எல்லாம் நல்ல நூல்களாக இருக்கிறது. இவற்றையெல்லாம் வாங்குவதற்குத்தான் எங்களிடம் பணமில்லை என்று வெளிப்படையாகவே பல இளைஞர்கள் சொன்னார்கள். இந்தக் குழந்தையை தூக்கி கொஞ்சுவதற்கு வாய்ப்பில்லையே என்ற ஏக்கத்தை அவர்களிடம் உணர முடிந்தது.
படிக்க:
♦ புரட்சியில் இளைஞர்கள் – நூல் அறிமுகம்
♦ இந்து ஆன்மீக கண்காட்சி : விசம் பரப்பும் பார்ப்பனியத்தின் சூப்பர் மார்கெட் !
நிறைய நூலைப் படித்துவிட்டு முதுகுக்குப் பின்னால் அடுக்கி வைத்துவிட்டு உட்கார்ந்து இருப்பதனால் என்ன பயன்? படிப்பின் தேவையை எனக்கானதாக மட்டுமில்லாமல், நான் வாழக்கூடிய சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமென்ற அந்த இளைஞர்களின் புரிதல் முன்னுதாரணமானது.
இன்னொரு சம்பவம், 50 வயதைக் கடந்த முதிய தம்பதியினர் வந்திருந்து நூல்களை தேர்வு செய்தனர். பார்ப்பவர்களுக்கு வயதான காலத்தில் பொழுது போகாமல் நூல் வாங்கிப் படிப்பதாக எண்ணத் தோன்றும். ஆனால், அவர் சொன்னார் “இதையெல்லாம் படிக்க முடிகிறதா? என்று கேட்கிறீர்கள். இதையெல்லாம் இதுவரை நான் படிக்காமல் இருந்திருக்கிறேன் என்றுதான் நான் பார்க்கிறேன் என்றார்.’’
இவை போன்ற இன்னும் பல சுவாரசியமான புத்தகக் காட்சி அனுபவங்களை பகிர்கிறார் தோழர் துரை. சண்முகம்.
அவரது உரையின் முழு காணொளியைக் காண …
பாருங்கள்! பகிருங்கள்!!
