பொள்ளாச்சி கொடூரம்! ஒருத்தனையும் தப்பவிடாதே! அதிமுக கிரிமினல் நாகராஜ் – திரு கும்பலை தூக்கிலிடு! என்ற முழக்கம் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது.
இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவுமில்லை என்று மாவட்ட போலீசு அதிகாரி தாமாக முன்வந்து விளக்கமளிக்கிறார். வாழ்வாதாரம் பறிக்கப்படுவதற்கு எதிராகப் போராடும் மக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரில் முறையிட முயற்சித்தாலும் மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. கீழ்நிலை அதிகாரிகளிடம் மனுவை கொடுத்துவிட்டு செல்லுங்கள் என துரத்தியடிப்பதுதான் வாடிக்கை.
இன்று, அதிமுக கிரிமினல் கும்பலைச் சேர்ந்த பார் நாகராஜனிடமிருந்து பவ்யமாக மனுவை பெற்றுக் கொள்கிறார் மாவட்ட ஆட்சியர். பொள்ளாச்சி கொடூரத்தை நிகழ்த்திய குற்றவாளிகளை சுதந்திரமாக உலவ அனுமதித்துவிட்டு, இந்த கொடூரத்தை அம்பலப்படுத்திய நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபாலுக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைத்திருக்கிறது, சி.பி.சி.ஐ.டி. போலீசு.
பொள்ளாச்சி கொடூரத்தை நிகழ்த்திய குற்றக்கும்பலுக்கும் அதிமுக-வுக்கும் மட்டுமல்ல அதிகார வர்க்கத்துக்கும் தொடர்பிருப்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது இந்த சம்பவங்கள். சட்டமும் சர்க்காரும் தண்டிக்கும் என்று பாமர மக்களிடம் மிச்சமிருந்த நம்பிக்கையையும் தகர்த்திருக்கிறது.
இந்தச் சூழலில்தான், தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக தொடர்கிறது மாணவர்களின் எழுச்சிமிக்கப் போராட்டங்கள். முன்னுதாரணமும் உத்வேகமும் கொண்ட மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பது நமது கடமை! அதிமுக கிரிமினல் கும்பலும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து நிற்பது அம்மணமான நிலையில் தெருப்போராட்டங்களை தீவிரமாக்குவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?
சிதம்பரம் – அண்ணாமலைப் பல்கலை கழகம் :
பொள்ளாச்சி பாலியல் வன்முறை – வெறியாட்டம்! அதிமுக கிரிமினல் நாகராஜ் – திரு கும்பலை தூக்கிலிடு! என்ற முழக்கத்துடன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். கடந்த மார்ச் – 12 அன்று கலைத்துறை மாணவர்களும்; மார்ச் – 13 அன்று அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கலை – அறிவியல் துறை மாணவர்களும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று மார்ச் – 14 அன்று பொறியியல் துறை மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பல்கலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
மதுரை – சட்டக்கல்லூரி :
மாணவர்களின் மனித சங்கிலிப் போராட்டம்.
பாலியல் குற்றவாளிகளை மக்கள் முன்னிலையில் தண்டிக்க வேண்டும் – திருச்சி ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் கோரிக்கை.
சீர்காழி – மக்கள் அதிகாரம் :
தேனி – மக்கள் அதிகாரம் :
தேனி மாவட்டம் கம்பம் வ.உ.சி. திடலில் மார்ச்-14 அன்று பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் மக்கள் அதிகாரம் அமைப்பும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசு அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம்.
தஞ்சை மண்டலம் – மக்கள் அதிகாரம் :
தொகுப்பு:

படிக்க:
♦ பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !
♦ பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
♦ எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?