… வர்றார் சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள் !

2014-ம் ஆண்டு தேர்தலின்போது திருவாளர் மோடியின் இடி முழக்கங்கள் !!!

  • இரண்டு கோடி புது வேலை வாய்ப்புகள் !
  • வெளிநாட்டு கறுப்பு பணத்தை கைப்பற்றி
    இந்தியர் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலட்சம் !
  • சீனாவை மிஞ்சும் பொருளாதார முன்னேற்றம்!
  • ஜப்பானின் கியோட்டாவை மிஞ்சும் வாரணாசி !
  • சுத்தமான கங்கை !
  • 100 ஸ்மார்ட் நகரங்கள் !
  • கஷ்மீருக்கு வெளியே வசிக்கும் பண்டிதர்களுக்கு கஷ்மீரில் மீள் குடியேற்றம் !

ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் ….

  • பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார சிதைப்பு !
  • ஒரே வருடத்தில் ஒரு கோடி வேலைவாய்ப்பு பறிப்பு !
  • கங்கையை சுத்தப்படுத்த செலவிட்ட 7000 கோடி என்னவானது என தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் கோயலிடம் குட்டு !
  • 2014 -ம் ஆண்டு டாலருக்கு ரூபாய் 58 இருந்த மதிப்பை ரூபாய் 70 ஆக மாற்றிய பொருளாதார மேதமை !
  • ஸ்மார்ட் சிட்டி என்ற நவீன நகரங்கள் என எவ்வித திட்டமிடுதலும் இன்றி ஏற்கனவே இயங்கும் பேருந்து நிலையங்களை அழித்தல் ! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கதையாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் அழிக்கப்பட்டு ஒரே நாளில் 450 கடைக்காரர்களை தெருவோர வியாபாரிகளாக மாற்றிய அவலம் !
  • 7000 கோடி கொள்ளையடித்து எப்போவாவது தலைகாட்டும் விஜய் மல்லையாவை இலண்டனில் தினம் தினம் தொலைக்காட்சிப் பேட்டி கொடுக்க வைத்தமை !
  • வெளிநாட்டு கறுப்புப் பணத்தை கைப்பற்ற முயலாத கையாலாகாத்தனம் !

மஞ்சள் தண்ணீரை பருப்பு இல்லாமல், ஊறுகாய் இல்லாமல் வெறும் சப்பாத்தியை சாப்பிட வைக்கிறார்கள் என்று கூறிய 2017-ம் ஆண்டு கஷ்மீரில் பணிபுரிந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் (BSF) தேஜ் பகதூர் யாதவ் சொன்ன குறையை சரி செய்யாமல் பணி நீக்கம் செய்து விட்டு தற்போது சௌக்கிதார் நடிப்பு !

  • பசு பாதுகாப்பு படுகொலைகள் !
  • கஷ்மீர மக்களை முற்றிலும் அன்னியப்படுத்தியமை!
  • வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை மறந்து எரிப்பவர்களையும் புதைப்பவர்களையும் வேறுபடுத்தி பேசிய ஒரே பிரதமர்!

உங்கள் முன் …

அந்த இரகசிய பட்டதாரி, பணமதிப்பிழப்பு பொருளாதார மேதை, ரஃபேல் ஊழல் காவலர், மல்லையாவை கைது செய்யா மாவீரர், அபிநந்தன் பாகிஸ்தானில் பிடிபட்டதை மறைத்த மெய்யர், எல்லா விமானங்களும் பத்திரமாக திரும்பிய பிறகுதான் தூங்கச் சென்றதாக பத்திரிகை செய்தி கொடுத்த விளம்பரம் விரும்பா தேசபக்தர், மறுபடியும் காவலர் வேடம் பூண்டு உங்களிடம் வருகிறார்…

தயை கூர்ந்து ஐந்து வருடம் அடிவாங்கி நெளிந்து போன இந்திய செம்பை ஒளித்து வையுங்கள் ….. வருகின்றார்.

  • 21 March at 19:02

தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் !!

யவு செய்து ஓட்டுக்களை எண்ணும் முன்பாக மோடிதான் வெற்றி பெற்றார் என அறிவித்து விடுங்கள் !! செலவாவது மிஞ்சும் !!!

டிராகுலாவால் கடிபட்டவர்களெல்லாம் டிராகுலாவாவது போல பாசிச பாஜக-வால் கடிபட்ட தேர்தல் ஆணையம் பாசிஸ்டுகளாக மாறியதில் ஆச்சரியமில்லை .

தேர்தல் விதிமுறைகளில் முதலாவது நெறிமுறை வாக்காளர்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தக்கூடாது என்பது. ஆனால், ஐம்பத்தியாறு இஞ்ச் போலி பட்டதாரி ஊர் ஊராகச் சென்று மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி எவ்வித தடங்கலுமில்லாமல் பிரச்சாரம் செய்கிறார் தேர்தல் ஆணையம் விரல் சப்பிக்கொண்டு அமர்ந்திருக்கிறது.

படிக்க:
ரஃபேல் ஊழல் நூல் பறிமுதல் : மோடிக்கு ஆதரவாக தேர்தல் கமிசனின் நடவடிக்கை !
நாடார் வரலாறு கறுப்பா? காவியா?

மோடியின் ரபேல் ஊழலை தேர்தல் நேரத்தில் கூட சொல்ல முடியவில்லை என்றால் சனநாயகம் எதற்கு? தேர்தல் ஆணையம் எதற்கு ??

பின் குறிப்பு: இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைகளில் ( basic feature ) ஒன்று நேர்மையான பொதுத்தேர்தல் என கல்லூரியில் படித்த ஞாபகம்.

  • 2 April at 18:16

முகநூலில் : Lajapathi Roy


வாங்கிவிட்டீர்களா?…
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க