சிவபெருமானின் சாதி “முதலியாரா”.. ? ஆம் “முதலியார்”தான் என்கிறது திருக்கோவையாருக்கான பழைய உரை.
நண்பர்களே….
ஏசுநாதர் ஒரு யூதர் என்பது யாவரும் அறிந்தது. சிவபெருமான் முதலியார் என்பதை நாம் அறிவோமா? மாணிக்கவாசகர் எழுதிய திருக்கோவையாருக்கு இரண்டு உரைகள் உள்ளன. ஒன்று “பேராசிரியர்” எழுதியது. மற்றொன்று ஆசிரியர் பெயர் தெரியாதது. எனவே அதனை பழைய உரை என்பார்கள். அந்த பழைய உரையில் 6 இடங்களில் சிவபெருமான் முதலியார் என்று குறிக்கப்படுகின்றார். இந்த பழைய உரை சுமார் 500, 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
குறிப்பு:
தருமபுரம் ஆதினம் வெளியிட்டுள்ள பன்னிரு திருமறை தொகுதிகளில் எட்டாம் திருமறையான திருவாசகமும் திருக்கோவையாரும் இரண்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருக்கோவையாரில் பேராசிரியர் உரையும் பழைய உரையும் அச்சிடப்பட்டுள்ளதாக முதல் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் நூலின் எந்த இடத்திலும் இந்த பழைய உரை அச்சிடப்படவில்லை. எனவே அந்த நூலை கையில் வைத்துள்ள நண்பர்கள் இந்த பகுதிகள் இடம்பெறவில்லை என்று நினைக்க வேண்டாம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூலில் இந்தப் பகுதிகள் உள்ளன. அந்நூலின் இணைப்பையும் உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.
தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …
நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி