புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் வேலூரில் தோழர் லெனினின் 150-வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம், மீன் மார்க்கெட் கிளை மற்றும் அண்ணா கலையரங்கம் கிளைகளில் சங்கக்கொடி ஏற்றி பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் குறித்து உரை நிகழ்த்தப்பட்டது.

மீன் மார்க்கெட் கிளையில், தோழர் விஜயா தலைமையில் நடைபெற்ற விழாவில் தோழர் கவிதா சங்கக் கொடி ஏற்றினார். ம.க.இ.க தோழர் அகிலன் மற்றும் கிளைச் சங்கத் துணைத் தலைவர் தோழர் சுப்பிரமணி ஆகியோர் உரையாற்றினர். துணைச் செயலாளர் தோழர் சேட்டு நன்றி கூறினார்.

அண்ணா கலையரங்கம் கிளையில், கிளைச் சங்கத் தலைவர் தோழர் E. சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற விழாவில் கிளைச் சங்கத் துணைத் தலைவர் தோழர் பழனி சங்கக் கொடி ஏற்றினார். தோழர் வில்சன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சரவணன் ஆகியோர் உரையாற்றினர். துணைத் தலைவர் தோழர் G. சுப்பிரமணி நன்றி கூறினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
வேலூர் மாவட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க